ADDED : ஜன 31, 2025 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:மத்திய கலாசார துறையின் கீழ் செயல்படும், இலக்கிய அமைப்பான சாகித்ய அகாடமி, 1955 முதல், ஒவ்வொரு ஆண்டும் தமிழ் உள்ளிட்ட, 24 மொழிகளில் வெளியான, சிறந்த நுால்களுக்கு, சாகித்ய அகாடமி விருது வழங்குகிறது.
விருதாளர்களுக்கு, சாகித்ய அகாடமி, 'லோகோ'வுடன் கூடிய கேடயம், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான விருதுக்கு, 2019 ஜனவரி முதல், 2023 டிசம்பர் வரை, முதன்முதலில் வெளியிடப்பட்ட புத்தகங்களை, எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், அல்லது எழுத்தாளரின் நலம் விரும்பிகள், நுாலின் ஒரு படியை, வரும், 28ம் தேதிக்குள், சாகித்ய அகாடமி அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
மேலும், சாகித்ய அகாடமி விருதுக்கான விதிகளை www.sahitya-akademi.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.