ADDED : மே 04, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:துாத்துக்குடி மாவட்டம் வ.உ.சி., துறைமுகம் அருகில், மத்திய அரசின் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், தமிழக மின் வாரியத்துடன் இணைந்து, என்.டி.பி.எல்., பெயரில், கூட்டு அனல் மின் நிலையம் அமைத்துள்ளது.
இங்கு தலா, 500 மெகா வாட் திறனில், இரு அலகுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிலிருந்து, தமிழகத்திற்கு தினமும், 410 மெகா வாட் தரப்படுகிறது; மீதி மின்சாரம், பிற மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், என்.டி.பி.எல்., மின் நிலையத்தின் இரண்டாவது அலகில் பழுது காரணமாக, நேற்று முன்தினம் இரவு, 9:54 மணி முதல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்திற்கான ஒதுக்கீடும் குறைந்துள்ளது.

