sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உடுமலையில் 'நம்பர்' லாட்டரி விற்பனை அமோகம்; தினமும் ரூ.30 லட்சம் 'புரளுது':

/

உடுமலையில் 'நம்பர்' லாட்டரி விற்பனை அமோகம்; தினமும் ரூ.30 லட்சம் 'புரளுது':

உடுமலையில் 'நம்பர்' லாட்டரி விற்பனை அமோகம்; தினமும் ரூ.30 லட்சம் 'புரளுது':

உடுமலையில் 'நம்பர்' லாட்டரி விற்பனை அமோகம்; தினமும் ரூ.30 லட்சம் 'புரளுது':

4


ADDED : டிச 22, 2024 08:44 AM

Google News

ADDED : டிச 22, 2024 08:44 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : தமிழகத்தில், லாட்டரி சீட்டுக்களால் குடும்பங்கள் பாதிக்கப்படுவது, தற்கொலைகளை தடுக்கும் வகையில், லாட்டரி விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால், உடுமலை நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில், 'நம்பர் லாட்டரி' விற்பனை அமோகமாக நடக்கிறது.

நகர பகுதியில், காந்திநகர், காந்திசவுக், போலீஸ் ஸ்டேஷன் பின்புறம், எம்.பி., நகர் என பல்வேறு பகுதிகளில் லாட்டரி கும்பல் ரகசியமாக கடை திறந்து, விற்பனை செய்து வருகிறது.

இம்முறையில், கேரளா, சிக்கிம் உள்ளிட்ட பல்வேறு மாநில லாட்டரிகளின், 'ஆன்லைன்' குலுக்கல் நேரத்திற்கு ஏற்ப, இக்கும்பல் துண்டு சீட்டில் நம்பர் எழுதி வழங்குகிறது. ஒரு லட்சம் பரிசுக்கு, ரூ. 50, கூடுதல் பரிசுக்கு ஏற்ப, 120, 360, ஆயிரம் ரூபாய் என்றும், அதற்கு ஆங்கில எழுத்து வரிசையுடன் எண்களை எழுதி, விற்பனை செய்கின்றனர்.

குறிப்பிட்ட நேரத்தில், அந்த பெயருடைய லாட்டரி குலுக்கல் முடிந்து, 'ஆன்லைன்' வாயிலாக வெளியிடப்படும் முடிவு அடிப்படையில் பரிசு வழங்கப்படுகிறது. சிறிய அளவிலான பரிசுகளை மட்டும் வழங்கும் அக்கும்பல், பெரிய அளவில் விழுந்தால், அவர்களை, அடித்து விரட்டும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

அதே போல், 'வாட்ஸ்ஆப்' வாயிலாகவும், வாங்கும் நபர்கள் 'ராசி' யான எண் எழுதி வந்தால், அதனை மொபைலில் போட்டோ எடுத்துக்கொண்டு, அதற்குரிய பணத்தை பெற்றுக்கொள்கின்றனர்.

பல லட்சம் ரூபாய் பரிசு விழும்; வாழ்க்கை மாறிவிடும் என்ற நம்பிக்கையில், தொழிலாளர்கள், ஏழை குடும்பங்களை சேர்ந்த பலர், லாட்டரி வாங்குகின்றனர். இதனால், பல குடும்பங்கள் வாழ வழியின்றி, லாட்டரி மோசடியால் பாதித்து வருவதோடு, ஏமாற்றத்தால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

உடுமலை நகரில் மட்டும், நம்பர் லாட்டரி மோசடியில், தினமும் 30 லட்சம் ரூபாய் வரை வர்த்தகம் நடப்பதாக கூறப்படுகிறது. தனியாக அலுவலகம், கடை அமைத்து, லாட்டரி விற்பனை நடந்தாலும், போலீசார் 'மாமூல்' பெறுவதால், கண்டு கொள்வதில்லை.

அரசு தடை செய்தாலும், உள்ளூரில் களைகட்டியுள்ள லாட்டரி விற்பனையை தடை செய்ய, திருப்பூர் எஸ்.பி., மேற்கு மண்டல ஐ.ஜி., ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us