ADDED : செப் 26, 2024 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
''மாற்றுத் திறனாளிகள் ஓட்டும் வாகனங்களுக்கு, சாலை வரி, ஜி.எஸ்.டி., --- காப்பீடு வரி போன்றவற்றுக்கு விலக்கு கோரி, 20 ஆண்டுகளாக போராடினோம்.
நீதிமன்றத்தையும் நாடினோம். மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், கடந்தாண்டு பிப்ரவரியில் அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை தமிழகத்தில் அமல்படுத்தினால், சாலை போக்குவரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக வழங்கப்படும் உரிமைகளையும், திட்டங்களையும் பெற முடியும். ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும், தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி, மத்திய அரசின் உத்தரவை, தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்.
- பி.சிம்மசந்திரன்,
மாநில தலைவர், மாற்றுத்திறனுடையோர் சங்கங்கள் கூட்டமைப்பு.

