sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சி.என்.ஜி., வாகன எண்ணிக்கை அதிகரிப்பு வீடுகளுக்கு 'பைப்லைனில்' வழங்க சலுகை

/

சி.என்.ஜி., வாகன எண்ணிக்கை அதிகரிப்பு வீடுகளுக்கு 'பைப்லைனில்' வழங்க சலுகை

சி.என்.ஜி., வாகன எண்ணிக்கை அதிகரிப்பு வீடுகளுக்கு 'பைப்லைனில்' வழங்க சலுகை

சி.என்.ஜி., வாகன எண்ணிக்கை அதிகரிப்பு வீடுகளுக்கு 'பைப்லைனில்' வழங்க சலுகை


UPDATED : பிப் 18, 2024 04:26 AM

ADDED : பிப் 18, 2024 04:24 AM

Google News

UPDATED : பிப் 18, 2024 04:26 AM ADDED : பிப் 18, 2024 04:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை மற்றும் புறநகரில், சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை, 35,210 ஆக அதிகரித்துள்ளது. அதில் குறிப்பாக, கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும், 2,863 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதேநேரத்தில், வீடுகளுக்கு, 'பைப்லைன்' எனப்படும் குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்வதற்கான முன்பதிவுக்கு, பல்வேறு சலுகைகளை எரிவாயு வினியோக நிறுவனங்கள் அறிவித்துஉள்ளன.

ஊக்குவிப்பு


மத்திய அரசு, சுற்றுச்சூழல் மாசு அடைவதை தடுக்க, பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, கச்சா எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் சமையல் காஸ் சிலிண்டருக்கு பதில், இயற்கை எரிவாயு பயன்படுத்துவதை ஊக்குவித்து வருகிறது.

குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடகா, டில்லி உள்ளிட்ட மாநிலங்களில், குழாய் வழித்தடத்தில் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வினியோகம் செய்யப்படுகிறது.

அனுமதி


சென்னை எண்ணுாரில், இந்தியன் ஆயில் நிறுவனமானது, எல்.என்.ஜி., எனப்படும், 'லிக்கியூபைடு நேச்சுரல் காஸ்' எனப்படும் திரவநிலை இயற்கை எரிவாயு முனையம் அமைத்துள்ளது. இதற்கு, வெளிநாடுகளில் இருந்து கப்பல்களில் திரவநிலை எரிவாயு எடுத்து வரப்படுகிறது.

தமிழகத்தில், 1.61 கோடி வீடுகளுக்கு குழாய் வழித்தடத்திலும்; 2,865 சி.என்.ஜி., நிலையங்கள் வாயிலாக வாகனங்களுக்கும் இயற்கை எரிவாயு வினியோகிக்க எட்டு நிறுவனங்களுக்கு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் அனுமதி அளித்துள்ளது.

அந்நிறுவனங்கள் மாநிலம் முழுதும், 27,563 கிலோ மீட்டருக்கு குழாய் வழித்தடம் அமைக்கப்பட வேண்டும்.

Image 1233589


சென்னையில், 'டோ ரண்ட்' காஸ் நிறுவனத்தின், 25 சி.என்.ஜி., நிலையங்கள் வாயிலாக எரிவாயு விற்பனையை, 2021 ஆகஸ்டில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

அப்போது, சென்னையில் சி.என்.ஜி.,யில் இயங்கும் ஆட்டோக்கள் எண்ணிக்கை, 10.

பெட்ரோல், டீசலுடன் ஒப்பிடும் போது, சி.என்.ஜி., விலை குறைவாக உள்ளது. மேலும், கூடுதல், 'மைலேஜ்' தருவதுடன், சுற்றுச்சூழலையும் பாதிப்பதில்லை.

இதனால், வாகன ஓட்டிகள், சி.என்.ஜி.,யில் இயங்கும் வாகனங்களை வாங்கி வருகின்றனர். மற்ற மாவட்டங்களில் சி.என்.ஜி., நிலையம் அமைக்கும் பணி தற்போது தான் துவங்கியுள்ளது.

17,500 வீடுகள்


அம்மாவட்டங்களில், 5 - 10 சி.என்.ஜி., நிலையங்கள் உள்ள நிலையில், சென்னையில், 67 நிலையங்கள் உள்ளன. சென்னை மற்றும் புறநகரில் தான், சி.என்.ஜி.,யில் இயங்கும் வாகனம் வாங்குவோர் அதிகரித்து வருகின்றனர்.

இதேபோல் வீடுகளுக்கும் குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது, தமிழகம் முழுதும், 17,500 வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யப்படுகிறது.

தற்போது, வீட்டு வாடிக்கையாளரை கவரும் வகையில் முன்பதிவு செய்ய பல்வேறு சலுகைகளை, காஸ் வினியோக நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

வாகனங்கள் பயன்பாடு

சென்னையில், 2021ல் 10 என்ற எண்ணிக்கையில் இருந்த சி.என்.ஜி., வாகனங்கள் எண்ணிக்கை, இந்தாண்டு ஜன., நிலவரப்படி, 35,210 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஆட்டோக்களின் எண்ணிக்கை, 25,549; கார் எண்ணிக்கை, 8,368; வர்த்தக வாகனங்கள் 1,293 .அதற்கு ஏற்ப, கடந்த டிச., வரை, தினசரி, 83,000 கிலோவாக இருந்த இயற்கை எரிவாயு விற்பனை தற்போது, 1 லட்சம் கிலோவை தாண்டி, 1.10 லட்சம் கிலோ என்றளவில் உள்ளது.



என்னென்ன சலுகைகள்?

இதுகுறித்து, 'டோரண்ட் காஸ்' நிறுவனத்தின் மார்கெட்டிங் பிரிவு துணை தலைவர் ஆர்.சித்தார்த்தன் கூறியதாவது:எங்கள் நிறுவனம், சென்னை, திருவள்ளூரில் வீடுகளுக்கு காஸ் வினியோகம் செய்யும் பணியை மேற்கொள்கிது. வீட்டிற்கு காஸ் இணைப்பு வழங்க பதிவு கட்டணம், டிபாசிட் கட்டணம் என, 7,090 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அதில், 590 ரூபாய் தவிர்த்து, டிபாசிட் உட்பட, 6,000 ரூபாய் வாடிக்கையாளரிடம் திரும்ப செலுத்த கூடியது. தற்போது, பதிவு கட்டணத்தில், 1,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. முதல் இரண்டு மாத காஸ் பயன்பாடு கட்டணத்திற்கும் தலா, 200 ரூபாய் வீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.பதிவு கட்டணத்தையும் மாதம், 500 ரூபாய் வீதம் தவணை முறையில் செலுத்தலாம். ஒரு வாடிக்கையாளர், மற்றொருவரை அறிமுகம் செய்தால், 100 ரூபாய் வழங்கப்படும். இதுதவிர, சி.என்.ஜி.,யில் ஓடாத வாகனங்களிலும், அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்தி இயக்க முடியும். அவ்வாறு, சி.என்.ஜி.,யில் இயங்கும் ஆட்டோவாக மாற்றும் வாடிக்கையாளருக்கு, 10,000 ரூபாய் மதிப்புள்ள காஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. சி.என்.ஜி., வர்த்தக வாகனமாக மாற்ற, 5,000 ரூபாய் முதல், 20,000 ரூபாய் வரையும்; சி.என்.ஜி., பஸ் ஆக மாற்ற, 30,000 ரூபாய் மதிப்புள்ள காஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் ஏ.ஜி. அண்டு பி பிரதம் நிறுவனம், ஒரு மாதத்திற்கு இலவச எரிவாயு, பூஜ்ய செக்யூரிட்டி டிபாசிட், பூஜ்ய பதிவு கட்டணம் உள்ளிட்ட சலுகை அறிவித்து உள்ளது. இதேபோல், மற்ற நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன. அந்த சலுகைகள் வரும் மார்ச் வரை இருக்கும்.








      Dinamalar
      Follow us