sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.1,500 லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

/

ரூ.1,500 லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

ரூ.1,500 லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

ரூ.1,500 லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

7


ADDED : ஜன 31, 2025 09:34 PM

Google News

ADDED : ஜன 31, 2025 09:34 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: ரூ.1,500 லஞ்சம் வாங்கிய புவனகிரி வட்டார காலை உணவுத்திட்ட மேற்பார்வையாளர் செந்தமிழ்ச்செல்வியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம் திருமுட்டம் தாலுகா கானுரை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வி, மேல்புவனகிரி வட்டார இயக்க மேலாளராக உள்ளார்.

இந்நிலையில், கடலுார் மாவட்டம் புவனகிரி தாலுகா மஞ்சக்கொல்லை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி காலை சமையல் பொறுப்பாளராக உள்ள செளந்தர்யா,25 கடந்த ஜன.9 ம் தேதி பணியில் இருந்த போது, கடலுார் மாவட்ட ஆய்வுக்குழு துணை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

அந்த ஆய்வில், துவக்கப்பள்ளிக்கு விநியோகிக்கப்பட்ட சேமியாவின் அளவு தவறுதலாக குறைவாக இருப்பதை காரணம் காட்டி மேல்புவனகிரி வட்டார இயக்க மேலாளர் செந்தமிழ்செல்வி, வேலையை விட்டு நீக்காமல் இருக்க செளந்தர்யாவிடம் ரூ.2ஆயிரம் லஞ்சம் கேட்டார். பின்னர் அவரின் வேண்டுகோளின்படி, ரூ.1,500 குறைத்து கேட்டார்.

இந்நிலையில் செளந்தர்யா, லஞ்சம் கொடுக்க விரும்பாமல் கடலுார் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்தில் செந்தமிழ்செல்வி மீது புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று செளந்தர்யாவிடமிருந்து ரூ.1,500 லஞ்சப்பணத்தை செந்தமிழ்செல்வி கேட்டு வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், செந்தமிழ்செல்வியை கைது செய்தனர். அதை தொடர்ந்து அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் அவரது வீட்டிலும் சோதனை நடந்தது.






      Dinamalar
      Follow us