sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேர்தல் தேதி அறிவிப்பு சனிக்கிழமையிலும் அலுவலகங்கள் 'பிஸி'

/

தேர்தல் தேதி அறிவிப்பு சனிக்கிழமையிலும் அலுவலகங்கள் 'பிஸி'

தேர்தல் தேதி அறிவிப்பு சனிக்கிழமையிலும் அலுவலகங்கள் 'பிஸி'

தேர்தல் தேதி அறிவிப்பு சனிக்கிழமையிலும் அலுவலகங்கள் 'பிஸி'


ADDED : மார் 17, 2024 04:26 AM

Google News

ADDED : மார் 17, 2024 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்கள் விடுமுறை நாளான நேற்றும்இயங்கின.

சென்னை சேப்பாக்கம்எழிலகம் வளாகத்தில் போக்குவரத்து, வேளாண்மை, தோட்டக்கலை, பொதுப்பணி, வருவாய், தமிழக குடிநீர் வடிகால் வாரியம், கனிமவளம், நில நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன.

இந்த அலுவலகங்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுகிழமை விடுமுறை நாளாகும். இவ்விரு நாட்களும், எழிலக வளாகம் வெறிச்சோடி கிடக்கும்.

முக்கிய பணிகள் காரணமாக ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மட்டும், அங்கு வந்து செல்வர். விடுமுறை நாளான நேற்று பல அலுவலகங்கள் திறந்திருந்தன.

லோக்சபா தேர்தல் தேதி நேற்று மாலை அறிவிக்கப்பட்ட நிலையில், நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்னதாக, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தேர்தல் அறிவிப்புக்கு பின், அனைவரும் புறப்பட்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us