sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போதை கடத்தலில் அதிகாரிகள் தொடர்பு: பா.ஜ., அதிர்ச்சி

/

போதை கடத்தலில் அதிகாரிகள் தொடர்பு: பா.ஜ., அதிர்ச்சி

போதை கடத்தலில் அதிகாரிகள் தொடர்பு: பா.ஜ., அதிர்ச்சி

போதை கடத்தலில் அதிகாரிகள் தொடர்பு: பா.ஜ., அதிர்ச்சி

20


ADDED : செப் 19, 2024 07:03 AM

Google News

ADDED : செப் 19, 2024 07:03 AM

20


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : தமிழக இளைஞர்களின் நலனை கருதி, போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை, முதல்வர் எடுக்க வேண்டும் என, தமிழக பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.

அக்கட்சி அறிக்கை:


தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தலையும், ஊடுருவலையும் தடுக்க வேண்டிய காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகளில், 850 பேர், கடத்துபவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக வெளியாகியுள்ள தகவல், மக்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

தங்கள் நிர்வாகத்தில் உள்ள அரசு அதிகாரிகளே போதைப்பொருள் கடத்தலுக்கு துணை போவதை, இத்தனை ஆண்டுகளாக கண்காணிக்க தவறியது, முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க., அரசின் நிர்வாகத் தோல்வியைக் காட்டுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாக, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கமும், போதையால் ஏற்படும் வன்முறை குற்றங்களும் அதிகரித்து வருவது நிஜம். குறிப்பாக, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வரை பெரும்பாலான இளைஞர்கள் கூட்டம், போதையின் கோரப்பிடியில் சிக்கி, தங்கள் எதிர்காலத்தை தொலைத்து விட்டனர் என்பதுதான் திராவிட மாடல் அரசின் கோர முகம்.

இளைஞர்களின் நலனைக் கருதி, போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, முதல்வர் ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us