sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஐயோ நெஞ்சு வலிக்குதே... அலறிய மேயர்; கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் அதிர்ச்சி!

/

ஐயோ நெஞ்சு வலிக்குதே... அலறிய மேயர்; கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் அதிர்ச்சி!

ஐயோ நெஞ்சு வலிக்குதே... அலறிய மேயர்; கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் அதிர்ச்சி!

ஐயோ நெஞ்சு வலிக்குதே... அலறிய மேயர்; கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் அதிர்ச்சி!

18


ADDED : டிச 30, 2024 06:14 PM

Google News

ADDED : டிச 30, 2024 06:14 PM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்பகோணம்: கும்பகோணம் மாமன்ற கூட்டத்தில் மேயர் திடீரென தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறி அலப்பறை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணம் மாநகராட்சி மேயராக பதவி வகித்து வருகிறார் சரவணன். தமிழகத்திலேயே ஒரே காங்., கட்சி மேயராக உள்ள இவருக்கும், தி.மு.க., கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதனிடையே, மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 54 தீர்மானங்களுக்கான கோப்புகளை தி.மு.க., கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி கேட்ட போது, கூட்டம் முடிந்துவிட்டதாகக் கூறிய மேயர், அவரது அறைக்குச் செல்ல முயன்றார்.

இதனையறிந்து வேகமாக ஓடிச்சென்ற தட்சிணாமூர்த்தி, மேயர் அறை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மேயர் சரவணன் செய்வதறியாது திகைத்தார்.

அப்போது மேயர் சரவணன் திடீரென மாமன்ற அலுவலகத்தின் தரையில் படுத்தபடி, தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுவிட்டதாக அலறினார். பதறிப்போன கவுன்சிலர்கள் அவரை ஆசுவாசப்படுத்தி, மேயர் அறைக்கு அழைத்துச் சென்றனர்.

கோப்புகளைக் கேட்டால் நெஞ்சுவலி ஏற்பட்டுவிட்டது என்று மேயர் நடிப்பதாக தட்சிணாமூர்த்தி உட்பட தி.மு.க., கவுன்சிலர்கள் விமர்சித்தபடி நடையைக்கட்டினர்.

'ஐயோ நெஞ்சு வலிக்குதே' என்று மேயர் தரையில் படுத்து அலறிய சம்பவம் கும்பகோணம் மாநகராட்சியில் சிறுது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us