sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விரைவில் 100 மின்சார ஆம்னி பஸ்கள்; 3 இடங்களில் 'சார்ஜிங்' மையங்கள் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் முடிவு

/

விரைவில் 100 மின்சார ஆம்னி பஸ்கள்; 3 இடங்களில் 'சார்ஜிங்' மையங்கள் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் முடிவு

விரைவில் 100 மின்சார ஆம்னி பஸ்கள்; 3 இடங்களில் 'சார்ஜிங்' மையங்கள் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் முடிவு

விரைவில் 100 மின்சார ஆம்னி பஸ்கள்; 3 இடங்களில் 'சார்ஜிங்' மையங்கள் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் முடிவு

2


ADDED : அக் 25, 2025 06:45 AM

Google News

ADDED : அக் 25, 2025 06:45 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் முதன்முறையாக, 100 மின்சார ஆம்னி பஸ்கள் ஒரு மாதத்தில் இயக்கப்பட உள்ளன. சென்னை கிளாம்பாக்கம் உட்பட மூன்று இடங்களில், 'சார்ஜிங்' மையங்கள் அமைக்க, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, சேலம், தஞ்சாவூர், பெங்களூரு போன்ற நகரங்களுக்கு இயக்க, 100 மின்சார ஆம்னி பஸ்களை, 178 கோடி ரூபாயில் வாங்க, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம், டாடா மோட்டார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இது குறித்து, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறியதாவது:

தமிழகத்தில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், 'இன்டர்சிட்டி' ஆம்னி மின்சார சொகுசு பஸ்களை இயக்க உள்ளோம். ஒரு முறை சார்ஜிங் செய்தால், 380 கி.மீ., துாரம் செல்ல முடியும். முதல்கட்டமாக, 100 பஸ்களை இன்னும் ஒரு மாதத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளோம். அடுத்த கட்டமாக மேலும், 200 மின்சார பஸ்கள் வாங்க திட்டமிட்டுள்ளோம்.

உளுந்துார்பேட்டையில், சார்ஜிங் மையம் பணிகள் முடிந்து தயாராக உள்ளது. அதுபோல், கிளாம்பாக்கம், குத்தம்பாக்கம், வேலுார் பஸ் நிலையங்கள் அருகில், சார்ஜிங் மையங்கள் அமைக்க, இடங்களை தேர்வு செய்துள்ளோம். ஒவ்வொரு இடத்திலும், தலா 2 கோடி ரூபாய் செலவில் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us