sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜன.22ல் சிறுபான்மையினரும் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும்

/

ஜன.22ல் சிறுபான்மையினரும் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும்

ஜன.22ல் சிறுபான்மையினரும் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும்

ஜன.22ல் சிறுபான்மையினரும் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும்


ADDED : ஜன 16, 2024 02:02 AM

Google News

ADDED : ஜன 16, 2024 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின்போது ஜன.22ல் சிறுபான்மையினர் வீடுகளிலும் அகல்விளக்கு ஏற்ற வேண்டும்'' என பா.ஜ., சிறுபான்மை பிரிவு பொதுச் செயலாளர் வேலுார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: பிரதமர் மோடி ஜன.,22ல் அயோத்தியில் ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை பெருவிழாவை தேசத்தின் கலாசார விழாவாக கொண்டாட வேண்டும். அன்று மாலையில் வீடுகளில் அகல்விளக்கு ஏற்ற வேண்டும் என்று தெரிவித்தார். அதன் அடிப்படையில் பா.ஜ., சிறுபான்மை அணி சார்பில் தமிழகம் முழுவதும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின் அழைப்பிதழ், அகல்விளக்கையும் வழங்கி, பிரதமர் கருத்தை தெரிவித்து வருகிறோம்.

திண்டுக்கல் வியாகுல அன்னை சர்ச் பாதிரியார் செல்வராஜ் உட்பட பலருக்கு அழைப்பிதழ் வழங்கினோம்.

மதுரையில் முஸ்லிம் பெண்கள், கிறிஸ்தவ சகோதரர்களிடமும் வழங்கினோம். அனைவரும் விளக்கேற்றுவதாக தெரிவித்தனர்.இத்தருணத்தில் மதநல்லிணக்கத்துக்கு எதிரான தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் தவறான பிரசாரத்தை சிறுபான்மை மக்கள் முன்வைத்து, அவர்களை பெரும்பான்மை சமுதாயத்தினருடன் இணையாமல் பிளவுபடுத்த முயற்சிக்கின்றன. இச்சூழ்ச்சியை முஸ்லிம், கிறிஸ்தவர்கள் புரிந்து கொண்டு தி.மு.க., காங்., கூட்டணியை புறந்தள்ளி, உண்மையான மதநல்லிணக்க அடையாளமான பிரதமர் நரேந்திர மோடி கரத்தை பலப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us