sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


ADDED : நவ 13, 2024 12:28 AM

Google News

ADDED : நவ 13, 2024 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவம்பர் 13, 1935

ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில், புலப்பாக்க முகுந்தராவ் - சரசம்மா தம்பதிக்கு மகளாக, 1935ல் இதே நாளில் பிறந்தவர் பி.சுசீலா.

இசை மேதை துவாரம் வெங்கடசாமிநாயுடுவிடம் இசை கற்றார். சென்னை வானொலியில், 'பாப்பா மலர்' நிகழ்ச்சியில் பாட துவங்கினார். இயக்குனர்கே.எஸ்.பிரகாஷ் ராவின், பெற்ற தாய் படத்தில், 'எதற்கு அழைத்தாய்...' பாடலை பாடி, பின்னணிபாடகியானார். ஏ.வி.எம்., நிறுவனத்தில் தமிழ் கற்று, ஒப்பந்த பாடகியாக ஆயிரக்கணக்கான பாடல்களை பாடினார்.

விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில், டி.எம்.எஸ்., - பி.பி.சீனிவாஸ் உள்ளிட்ட பாடகர்களுடன் இவர் பாடிய டூயட்களை ரசிகர்கள்கொண்டாடினர். அனைத்து இந்திய மொழிகளிலும்,அரை நுாற்றாண்டாக, 5,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய இவர், 'பத்ம பூஷன், கலைமாமணி' உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

தன் பெயரில் அறக்கட்டளை துவக்கி, இசை துறையினரை வளர்க்கிறார். 'ஆலய மணியின், முத்தான முத்தல்லவோ, மாலைப்பொழுதின், மறைந்திருந்து பார்க்கும்...' உள்ளிட்ட பாடல்களால்செவியில் தேனுாற்றும் இவருக்கு, இன்று 89வது பிறந்த தினம்!






      Dinamalar
      Follow us