sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


ADDED : ஜன 18, 2024 10:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2024 10:32 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜனவரி 19, 1855

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில், கணபதி அய்யர் - தர்மாம்பாள் தம்பதிக்கு மகனாக, 1855ல் இதே நாளில் பிறந்தவர் ஜி.கணபதி அய்யர்.

திருவையாறிலும், தஞ்சையிலும் பள்ளிப் படிப்பை முடித்து, சென்னையில் ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.ஏ., படித்து, திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளிக்கு தலைமை ஆசிரியரானார்.

பிரிட்டிஷ் அரசு, முத்துசாமி அய்யரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமித்தது. அதை, பிரிட்டிஷாரால் நடத்தப்பட்ட பல இதழ்கள், 'கருப்பரை நீதிபதியாக்கினால் சமூகநீதி கெடும்' என விமர்சனம் செய்தன. இந்த விமர்சனத்தை கண்டிக்க, தன் நண்பர்களுடன் இணைந்து, 'தி ஹிந்து' என்ற ஆங்கில பத்திரிகையை துவக்கினார்.

தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்காக, 'சுதேச மித்ரன்' என்ற முதல் அரசியல் பத்திரிகையை துவக்கினார்; பாரதியார் உள்ளிட்ட தேச பற்றாளர்கள் இதில் பணியாற்றினர். இளம் வயதில் விதவையான தன் மகளுக்கு மறுமணம் செய்து புரட்சியாளர் ஆனார். 1916, ஏப்ரல் 18ல், தன் 61வது வயதில் மறைந்தார்.

காந்தியை, 'மகாத்மா' என, எழுதிய முதல் சுதந்திர இதழாளர் பிறந்த தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us