sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


ADDED : மார் 18, 2024 09:19 PM

Google News

ADDED : மார் 18, 2024 09:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்ச் 19, 2008

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோடு கிராமத்தில் ராதாகிருஷ்ணன் வேலாயுதம் நாயர் - கஸ்துாரி தம்பதியின் மகனாக, 1958, டிசம்பர் 11ல் பிறந்தவர் ரகுவரன்.

இவரது தந்தை, கோவையில் ஹோட்டல் தொழில் செய்தார். இவரும் அங்கேயே பள்ளி, கல்லுாரி படிப்புகளை முடித்தார். லண்டன் டிரினிட்டி கல்லுாரியில் பியானோ வாசிப்பிலும், சென்னை திரைப்படக் கல்லுாரியில் நடிப்பிலும் தேர்ச்சி பெற்றார்.

ஏழாவது மனிதன் திரைப்படத்தின் வாயிலாக தமிழில் அறிமுகமானார். கதாநாயகனாக அறிமுகமாகி, வில்லனாக வளர்ந்தார். முடிவல்ல ஆரம்பம், சம்சாரம் அது மின்சாரம் உள்ளிட்ட படங்கள் நல்ல புகழை தந்தன. வழக்கறிஞராக கலியுகம் போலீஸ் அதிகாரியாக தாய்மேல் ஆணை, ரவுடியாக கைநாட்டு, சிறப்பு தோற்றத்தில் அண்ணா நகர் முதல் தெரு, அஞ்சலி, சிவா உள்ளிட்ட படங்களிலும், வில்லனாக முதல்வன், முத்து, பாட்ஷா உள்ளிட்ட படங்களிலும் நடித்து பாராட்டப்பட்டார். போதை பழக்கத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, தன் 50வது வயதில், 2008ல் இதே நாளில் மறைந்தார்.

குரலில் கரகரப்பு, விழிகளில் மிரட்டல், நடையில் முரட்டுத்தனம் என அசாத்திய நடிப்பை சாத்தியமாக்கிய நடிகர் மறைந்த தினம் இன்று!






      Dinamalar
      Follow us