sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஓட்டு போடாவிட்டால் ஒரு நாள் லீவு 'கட்': உத்தரவு போட்டு பின்வாங்கிய தமிழக அரசு

/

ஓட்டு போடாவிட்டால் ஒரு நாள் லீவு 'கட்': உத்தரவு போட்டு பின்வாங்கிய தமிழக அரசு

ஓட்டு போடாவிட்டால் ஒரு நாள் லீவு 'கட்': உத்தரவு போட்டு பின்வாங்கிய தமிழக அரசு

ஓட்டு போடாவிட்டால் ஒரு நாள் லீவு 'கட்': உத்தரவு போட்டு பின்வாங்கிய தமிழக அரசு

14


ADDED : ஏப் 19, 2024 05:19 PM

Google News

ADDED : ஏப் 19, 2024 05:19 PM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அரசு ஊழியர்கள் ஓட்டு போடாவிட்டால் அவர்களது தற்செயல் விடுப்பு அல்லது ஈட்டிய விடுப்பு கணக்கிலிருந்து இருந்து ஒரு நாள் கழிக்கப்படும் என நேற்று (ஏப்.,18) தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.

தமிழகத்தில் இன்று (ஏப்.,19) மொத்தமுள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. 100 சதவீத ஓட்டுப்பதிவை ஊக்குவிக்கும் பொருட்டு அனைத்து தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசுத்துறைகளில் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும்; ஓட்டு போடாவிட்டால் அவர்களது தற்செயல் விடுப்பு அல்லது ஈட்டிய விடுப்பு கணக்கிலிருந்து இருந்து ஒரு நாள் கழிக்கப்படும் என நேற்று (ஏப்.,18) தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

ஓட்டளிக்காத ஊழியர்களுக்கு சம்பளம் 'கட்' ஆவதுடன், தற்செயல் விடுப்பு அல்லது ஈட்டிய விடுப்பு கணக்கிலிருந்து இருந்தும் ஒரு நாள் கழிப்பதாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு இன்று திரும்ப பெறப்பட்டது. உத்தரவு போட்டுவிட்டு அடுத்த நாளே தமிழக அரசு வாபஸ் பெறப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.






      Dinamalar
      Follow us