sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சைக்கிள் மீது பைக் மோதல் ஒருவர் பலி; 2 பேர் காயம்

/

சைக்கிள் மீது பைக் மோதல் ஒருவர் பலி; 2 பேர் காயம்

சைக்கிள் மீது பைக் மோதல் ஒருவர் பலி; 2 பேர் காயம்

சைக்கிள் மீது பைக் மோதல் ஒருவர் பலி; 2 பேர் காயம்


ADDED : மே 22, 2025 04:03 AM

Google News

ADDED : மே 22, 2025 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: சோரியாங்குப்பத்தில் சைக்கிள் மீது பைக் மோதி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்தனர்.

கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தை சேர்ந்தவர் நாமதேவன் 54; கூலித் தொழிலாளி. இவர், நேற்று இரவு பாகூர் அருகே சோரியாங்குப்பத்திற்கு சைக்கிளில் சென்றுவிட்டு, விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை மேம்பாலம் வழியாக திரும்பினார்.

சோரியாங்குப்பம் புதிய மேம்பாலம் வழியாக வந்தபோது, எதிரே வந்த பல்சர் பைக், சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் சைக்கிள் ஓட்டிச் சென்ற நாமதேவன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பைக்கில் இருந்து விழுந்த திருவந்திபுரம், புதுநகர் ஆகாஷ் 21; அஜி 20; இருவரும் காயமடைந்தனர். அவர்கள் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

விபத்து குறித்து கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us