ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்தில் ஒருவர் பலி; பயணிகள் 20 பேர் காயம்
ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்தில் ஒருவர் பலி; பயணிகள் 20 பேர் காயம்
ADDED : ஜன 08, 2025 07:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
 திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் டக்கரம்மாள்புரத்தை அடுத்த நாகர்கோவில் பைபாஸ் ரோடு இதயஜோதி நர்சிங் கல்லூரி அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் டக்கரம்மாள்புரத்தை அடுத்த நாகர்கோவில் பைபாஸ் ரோடு இதயஜோதி நர்சிங்  கல்லூரி அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஒருவர் உயிரிழந்தார்.
20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

