sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஒரே கட்சி, ஒரே குடும்பம், ஒரே ஆட்சி இதுதான் திராவிடம்: வானதி எம்.எல்.ஏ.,

/

ஒரே கட்சி, ஒரே குடும்பம், ஒரே ஆட்சி இதுதான் திராவிடம்: வானதி எம்.எல்.ஏ.,

ஒரே கட்சி, ஒரே குடும்பம், ஒரே ஆட்சி இதுதான் திராவிடம்: வானதி எம்.எல்.ஏ.,

ஒரே கட்சி, ஒரே குடும்பம், ஒரே ஆட்சி இதுதான் திராவிடம்: வானதி எம்.எல்.ஏ.,


ADDED : ஜன 30, 2025 02:52 AM

Google News

ADDED : ஜன 30, 2025 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:'நவீன தமிழ்நாடு, திராவிடத்தால் உருவானது என முதல்வர் ஸ்டாலின் கூறுவது, காமராஜர் போன்ற தலைவர்களை அவமதிப்பதாகும்' என்று, பா.ஜ., எம்.எல்.ஏ., வானதிசீனிவாசன் கூறியுள்ளார்.

கோவை தெற்கு எம்.எல்.ஏ., வானதிசீனிவாசன் அறிக்கை:

விழுப்புரத்தில் நடந்த தியாகிகள் மணி மண்டப திறப்பு விழாவில் பேசிய, தமிழக முதல்வர் ஸ்டாலின், 'திராவிடம் தான் தமிழ்நாடு என்ற பெயரையும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தையும் பெற்றுக் கொடுத்தது. இன்றைய நவீன தமிழகம், திராவிடத்தால் உருவானது' என்று கூறியுள்ளார்.

தமிழகத்தின் வளர்ச்சி, ஆங்கிலேயர் காலத்துக்கு முன்பே துவங்கி விட்டது. இன்றைய வளர்ச்சிக்கு ராஜாஜி, ஓமந்துாரார், காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெரும் பங்களித்துள்ளனர்.

1998 முதல் 2004 வரை வாஜ்பாய் ஆட்சியிலும், கடந்த பத்தரை ஆண்டுகால பிரதமர் மோடியின் ஆட்சியிலும், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட உட்கட்டமைப்புகளே, மாநிலத்தின் இன்றைய வளர்ச்சிக்கு முக்கிய காரணம். இதையெல்லாம் திராவிடத்திற்குள் அடக்கி, தமிழகத்துக்குமிகப்பெரிய அநீதி இழைக்கப்படுகிறது.

இது, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்ட, தொழில்முனைவோர்களைஅவமதிக்கும் செயல். அவர்களின் திறமையை, அறிவாற்றலை, பங்களிப்பை, திராவிடம் என போலி சித்தாந்த சிமிழுக்குள் அடைப்பது பெரும் அநீதி.

'திராவிடம்' என்ற நிலப்பரப்பை, திராவிட இனமாக்கி, தமிழ் மண்ணில் பிரிவினை எண்ணத்துக்கு விதைபோட்டவர், மதம் மாற்ற தமிழகம் வந்த, கிறிஸ்தவ பாதிரியார் ராபர்ட் கால்டுவெல்.

அவரது வழியில் சென்று, 'திராவிடம், திராவிடர், திராவிட மாடல்' எனக்கூறி, 'தமிழ், தமிழர் எனக்கூறி தமிழகத்தின் அடையாளத்தை அழிக்கப்பார்க்கிறது தி.மு.க.,

இவ்வாறு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us