sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருச்செந்துார், பழனி, திருவண்ணாமலை கோவில்களிலும் ஆன்லைன் மூலம் தரிசன முன்பதிவு: அமைச்சர் சேகர்பாபு

/

திருச்செந்துார், பழனி, திருவண்ணாமலை கோவில்களிலும் ஆன்லைன் மூலம் தரிசன முன்பதிவு: அமைச்சர் சேகர்பாபு

திருச்செந்துார், பழனி, திருவண்ணாமலை கோவில்களிலும் ஆன்லைன் மூலம் தரிசன முன்பதிவு: அமைச்சர் சேகர்பாபு

திருச்செந்துார், பழனி, திருவண்ணாமலை கோவில்களிலும் ஆன்லைன் மூலம் தரிசன முன்பதிவு: அமைச்சர் சேகர்பாபு

3


ADDED : ஜூன் 05, 2025 05:11 PM

Google News

ADDED : ஜூன் 05, 2025 05:11 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை முருகன் கோவிலில் 3.55 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் பக்தர்களுக்கான லிப்ட் வசதியை, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 4 ஆயிரம் கோவில்கள் கும்பாபிஷேகம் செய்வது தான் எங்கள் இலக்கு. கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க., ஆட்சியில், நான்காயிரம் கோவில் தான் திருப்பணிக்கு எடுத்துக் கொண்டார்கள். திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு, 10 ஆயிரம் கோவில்கள் திருப்பணிகள் நடைபெற்று, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

திருப்பதி ஆன்லைன் மூலம் தரிசன முன்பதிவு திட்டம் போல, திருச்செந்துார், பழனி, திருவண்ணாமலை கோவில்களில் ஏற்பாடு செய்வதற்கான பணிகள் துவங்கப்படள்ளது. விரைவில் முதல்வரால் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

சுவாமிமலையில் லிப்ட் அமைக்கும் பணி, வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு மக்களுடைய பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். திருக்கழுகுன்றம், திருப்பரங்குன்றம் கோவில்களுக்கு புதிய ரோப் கார் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கும். பக்தர்கள் வசதிக்காக பழனி மலையில் மேலும் ஒரு ரோப் கார் சேவை புதிதாக அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us