sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காவல், தீயணைப்பு துறை கட்டடங்கள் திறப்பு

/

காவல், தீயணைப்பு துறை கட்டடங்கள் திறப்பு

காவல், தீயணைப்பு துறை கட்டடங்கள் திறப்பு

காவல், தீயணைப்பு துறை கட்டடங்கள் திறப்பு


ADDED : மார் 30, 2025 03:12 AM

Google News

ADDED : மார் 30, 2025 03:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில், 41.32 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின் நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்துாரில், 50; தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில், 46 என மொத்தம், 96 காவலர் குடியிருப்புகள், 18.06 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் போலீஸ் நிலையம்; திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில், மகளிர் போலீஸ் நிலையம், 1.74 கோடி ரூபாயில் கட்டப்பட்டுஉள்ளன.

தீயணைப்பு துறை


சென்னை துரைப்பாக்கத்தில் 6; மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் 2; ராணிப்பேட்டையில் 19; திருச்சி மாவட்டம் துறையூரில், 18 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

சென்னை அம்பத்துார்; மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார்; தேனி மாவட்டம் கடமலைக்குண்டு; திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஆகியவற்றில், தீயணைப்பு நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை முதல்வர் ஸ்டாலின், நேற்று தலைமைச் செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார்.

அத்துடன் காவல் துறை பயன்பாட்டிற்காக, 5 கோடி ரூபாயில், 500 இரு சக்கர வாகனங்கள்; 27.09 கோடி ரூபாயில் வாங்கப்பட்டுள்ள, 300 பொலிரோ வாகனங்கள்; தீயணைப்பு துறைக்கு, 28.45 கோடி ரூபாயில், 50 நீர்தாங்கி வண்டிகள், 10 ஜீப்புகள், 50 இரு சக்கர வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில், தலைமை செயலர் முருகானந்தம், உள்துறை செயலர் தீரஜ்குமார், டி.ஜி.பி., சங்கர் ஜிவால், தீயணைப்புத் துறை இயக்குனர் அபாஷ்குமார் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us