sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வீடு, மனை ஒதுக்கீட்டை ரத்து செய்ய எதிர்ப்பு

/

வீடு, மனை ஒதுக்கீட்டை ரத்து செய்ய எதிர்ப்பு

வீடு, மனை ஒதுக்கீட்டை ரத்து செய்ய எதிர்ப்பு

வீடு, மனை ஒதுக்கீட்டை ரத்து செய்ய எதிர்ப்பு


ADDED : அக் 09, 2024 02:28 AM

Google News

ADDED : அக் 09, 2024 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:வீட்டுவசதி வாரியத்தில், இறுதி விலை நிர்ணயிப்பதில் முடிவு எட்டப்படாத வீடு, மனைகளின் ஒதுக்கீட்டையும், தவணை தவறியதாக கூறி ரத்து செய்ய முயற்சி நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, வீட்டுவசதி வாரிய ஒருங்கிணைந்த ஒதுக்கீட்டாளர்கள் நலச் சங்க பொதுச்செயலர் கே.ஜெயசந்திரன் கூறியதானது:

நீண்ட காலமாக தவணை செலுத்தாமல் உள்ள நபர்களின் வீடு, மனை ஒதுக்கீட்டை ரத்து செய்வது, வாரியத்தின் அதிகாரத்துக்கு உட்பட்ட நடவடிக்கை. அதில், எவ்வித பிரச்னையும் இல்லை. அதே நேரத்தில், இறுதி விலை நிர்ணயிப்பதில் பிரச்னை ஏற்பட்டு, வழக்கு உள்ளிட்ட காரணங்களால், பலரும் தவணை முடிக்காத நிலையில் இருக்கிறோம். நிலத்தின் விலை தொடர்பான பிரச்னையில், பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளில், ஒதுக்கீட்டாளர்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தும், அதை அமல்படுத்த வாரிய அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். மேலும், இதில் வாரிய அதிகாரிகளின் தவறான கணக்கீடே பிரச்னைக்கு காரணமாக உள்ளது.

இதுபோன்ற இறுதி விலை தொடர்பான வழக்கில் உள்ள ஒதுக்கீடுகளையும் ரத்து செய்யும் முயற்சியில், வாரிய அதிகாரிகள் இறங்கியுள்ளனர். இது, நீதிமன்ற அவமதிப்பு. இந்த விவகாரம் தொடர்பாக, வாரிய நிர்வாக இயக்குனருக்கு மனு அனுப்பி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us