sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோவில் நிதியில் திருமண மண்டபம் தற்போதைய நிலை தொடர உத்தரவு

/

கோவில் நிதியில் திருமண மண்டபம் தற்போதைய நிலை தொடர உத்தரவு

கோவில் நிதியில் திருமண மண்டபம் தற்போதைய நிலை தொடர உத்தரவு

கோவில் நிதியில் திருமண மண்டபம் தற்போதைய நிலை தொடர உத்தரவு


ADDED : ஏப் 03, 2025 01:17 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:தமிழகத்தில் கோவில் நிதி மூலம் 5 கோவில்களுக்கு திருமண மண்டபம் அமைக்கும் அரசாணைக்கு எதிரான வழக்கில், திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில், எந்த நிலையில் உள்ளதோ அதே நிலை தொடர உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம் ஏழுமலை ராம ரவிக்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு:

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உப கோவிலான வாகீஸ்வரர் கோவில், திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளிட்ட 5 கோவில்களுக்கு சொந்தமான இடங்களில், 22 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் திருமண மண்டபங்கள் அமைக்க தமிழக அறநிலையத்துறை 2023 மார்ச் 3ல் அரசாணை வெளியிட்டது.

இப்பணியை அந்தந்த கோவில் நிதி மூலம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் அபிராமி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் அமைக்கப்படுகிறது. இதற்கு, மாநகராட்சியிடம் கட்டட அனுமதி பெறவில்லை.

அறநிலையத்துறை சட்டப்படி கோவில் நிதியை நலிவடைந்த கோவில்களில் அறப்பணி மேற்கொள்ள பயன்படுத்தலாம். ஹிந்து மதத்தை பரப்ப மற்றும் கல்வி நிறுவனங்கள், ஆதரவற்ற இல்லங்கள், மருத்துவமனைகள் துவங்க கோவில் நிதியை பயன்படுத்தலாம்.

இதற்கு முரணாக திருமண மண்டபம் அமைக்க பயன்படுத்துவது விதிமீறலாகும்; அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

திண்டுக்கல் கோவிலில் திருமண மண்டபம் கட்டுமானத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவில் நிதியில் ரிசார்ட் அமைக்க பிறப்பித்த அரசாணை வாபஸ் பெறப்பட்டுள்ளது என, மனுதாரர் தெரிவித்தார்.

விபரம் பெற்று தெரிவிக்க, பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் அபிராமி அம்மன் கோவிலில் திருமண மண்டபம் அமைப்பதை பொறுத்தவரை, இவ்விவகாரம் தற்போது எந்த நிலையில் உள்ளதோ அதே நிலை தொடர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, ஏப்., 9க்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.






      Dinamalar
      Follow us