ADDED : பிப் 13, 2026 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
த மிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் அனைத்து பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 2ம் தேதி முதல், பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் போராட்டம் முடிந்த நிலையில், தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்தனர்.
இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுப்பட்ட பணியாளர்களை, பணி நீக்கம் செய்ய மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. உடனடியாக, சில மாவட்டங்களில், வெவ்வேறு காரணங்களைக் கூறி, பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதை கண்டித்து, நேற்று மீண்டும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில், மீண்டும் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

