ADDED : ஜன 09, 2025 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவத்தைத் தொடர்ந்து, கல்வராயன் மலைப்பகுதி மக்களின் மேம்பாடு தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற அமர்வில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அங்கு உள்ள அரசு மருத்துவமனை, பள்ளிகள் நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதை ஆய்வு செய்த நீதிபதிகள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகளில் உள்ள காலியிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்கும்படி, அரசுக்கு உத்தரவிட்டனர்.

