அதிகாரிகளின் சொத்து விவரத்தை ஆராய உத்தரவு: சட்டவிரோதமாக மண் அள்ளிய விவகாரத்தில் ஐகோர்ட் அதிரடி
அதிகாரிகளின் சொத்து விவரத்தை ஆராய உத்தரவு: சட்டவிரோதமாக மண் அள்ளிய விவகாரத்தில் ஐகோர்ட் அதிரடி
UPDATED : ஜன 10, 2025 08:35 PM
ADDED : ஜன 10, 2025 08:07 PM

சென்னை: கோவையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சட்டவிரோதமாக மண் அள்ளிய விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ள சென்னை ஐகோர்ட், கடந்த நான்கு ஆண்டுகளில் இப்பகுதியில் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் போலீசாரின் சொத்து விவரத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளது.
கண்துடைப்பு
ஒரு மணி நேரம் ஆகாது
அலட்சியம்
பிரச்னையா
நீதிமன்றம் எச்சரித்த போதும், இந்த பகுதிகளில் திட்டமிட்டு மண் அள்ளப்பட்டது குறித்து எந்த விசாரணையும் நடக்கவில்லை. இது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களினால் மட்டும் சாத்தியம் ஆகும். அங்கு சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டமைக்கப்பட்டு உள்ளன. அதிகளவு மணலை கொண்டு செல்ல ஏராளமான ஜேசிபிக்கள் மற்றும் வாகனங்கள் தேவைப்படும். அந்த வாகனங்களையும், அது எங்கிருந்து வந்தது, அதன் உரிமையாளர் யார் என்பதையும கண்டறிவதில் எந்த பிரச்னையும் இருக்காது.
சிறப்பு புலனாய்வு குழு
இந்த சிறப்பு புலனாய்வு குழுவில்,மாநில குற்றப்பிரிவு எஸ்.பி., நாகஜோதி
ஒருங்கிணைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவு எஸ்.பி., சசாங்க் சாய் ஆகியோர் இடம்பெறுவார்கள்.விசாரணை குழுவிற்கு தேவையான அதிகாரிகளை அவர்கள் தேர்வு செய்யலாம். இதற்கு டிஜிபி., அனுமதி அளித்து அந்த அதிகாரிகளை அனுப்பிவைக்க வேண்டும்.
புது வழக்கு
இந்த குழுவினர் பழைய வழக்குகளை விசாரிப்பதுடன், டுரோன் மூலம் ஆய்வு செய்தும், விசாரணை மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்து புதிதாக வழக்குகளை பதிவு செய்யலாம். அதிகாரிகள், மணல் மாபியாக்கள் மீது வழக்குப்பதிவு செய்வது என்பது சிறப்பு புலனாய்வு குழுவின் முடிவுக்கு உட்பட்டது. மணல் திருட்டில் ஒருங்கிணைக்கப்பட்ட குற்றம் உள்ளதா அல்லது இதற்கு பின்னணியில் உள்ளவர்கள் மற்றும் பெரிய மீன்களை கண்டுபிடிக்க வேண்டும். இந்த மணலை பெற்றவர்கள், அதன் மூலம் கல்லூரி, கல்வி நிறுவனங்களை கட்டிய பில்டர்கள் யார் என்பதை கண்டறியும் வரை விசாரணை தொடர வேண்டும். விசாரணை குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அறிக்கை
இந்த பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளில், பணியாற்றிய வருவாய்த்துறை அதிகாரிகள், விஏஓ., வருவாய் ஆய்வாளர், தாசில்தார், துணை தாசில்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்களின் சொத்து விவரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.