sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 சிறு வணிக கடன் அதிகம் வழங்க உத்தரவு

/

 சிறு வணிக கடன் அதிகம் வழங்க உத்தரவு

 சிறு வணிக கடன் அதிகம் வழங்க உத்தரவு

 சிறு வணிக கடன் அதிகம் வழங்க உத்தரவு


ADDED : நவ 16, 2025 01:43 AM

Google News

ADDED : நவ 16, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'கூட்டுறவு வார விழாவை ஒட்டி நடத்தப்படும் சிறப்பு முகாமில், சிறு வணிகப் பிரிவில், அதிகம் பேருக்கு கடன் வழங்க வேண்டும்' என, கூட்டுறவு வங்கி அதிகாரிகளுக்கு, கூட்டுறவு துறை அறிவுறுத்தி உள்ளது.

கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், பல்வேறு கூட்டுறவு வங்கிகளில், பயிர் கடன், நகைக்கடன் உட்பட பல வகையான கடன்கள் வழங்கப்படுகின்றன. தமிழகம் முழுதும், நேற்று முன்தினம், 72வது தேசிய கூட்டுறவு வார விழா துவங்கியது.

இதை முன்னிட்டு, கூட்டுறவு வங்கிகள் சார்பில், வரும், 20ம் தேதி வரை மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே கடன் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாமில், அதிக பயனாளிகளை சென்றடையும் வகையில், ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.

குறிப்பாக, சிறு வணிக கடன் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கும்படி, அதிகாரிகளை கூட்டுறவு துறை அறிவுறுத்தி உள்ளது. இந்த கடனுக்கு பிணைகள் கேட்கப்படாத நிலையில், கடன் வாங்கும் இருவரில் ஒருவர், மற்றொருவருக்கு ஜாமின் கையெழுத்து போட்டால் போதும்.






      Dinamalar
      Follow us