sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னையில் பெயரளவில் செயல்படும் பிற மாநில சுற்றுலா தகவல் மையங்கள்

/

சென்னையில் பெயரளவில் செயல்படும் பிற மாநில சுற்றுலா தகவல் மையங்கள்

சென்னையில் பெயரளவில் செயல்படும் பிற மாநில சுற்றுலா தகவல் மையங்கள்

சென்னையில் பெயரளவில் செயல்படும் பிற மாநில சுற்றுலா தகவல் மையங்கள்


ADDED : ஜூன் 09, 2025 01:59 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின், தலைமை அலுவலகத்தில் இயங்கி வரும் பிற மாநில சுற்றுலா தகவல் மையங்கள், பயணியர் எதிர்பார்த்த சேவைகளை வழங்காமல் பெயரளவில் செயல்பட்டு வருவதாக சுற்றுலா பயணியர் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் செயல்படும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக தலைமை அலுவலகத்தில், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, அந்தமான் நிகோபர் தீவுகள் உட்பட எட்டு மாநிலங்களின், சுற்றுலா தகவல் மற்றும் முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன.

இவற்றில், அந்த மாநிலங்களில் செயல்படுத்தப்படும் சுற்றுலா திட்டங்கள், சுற்றுலா பயணியருக்கு வழங்கப்படும் சலுகைகள், சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் குறித்த விபரங்களை, மக்களுக்கு எடுத்துரைப்பதற்காக இணை இயக்குநர் உள்ளிட்ட இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள், தகவல் கேட்டு வரும் சுற்றுலா பயணியருக்கு உரிய தகவல்களை தெரிவித்து, தங்கள் மாநிலங்களில் சுற்றுலா பயணியர் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால், தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக தலைமை அலுவலகத்தில் செயல்படும், பிற மாநில சுற்றுலா தகவல் மையங்கள் பெயரளவுக்கே செயல்படுகின்றன.

சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் கூறியதாவது:

கடந்த மாதம் குடும்பத்துடன் திருப்பதி செல்ல முடிவு செய்து, ஆந்திர மாநில தகவல் மையத்திற்கு நேரில் சென்றோம். அங்கிருந்த அதிகாரியிடம் சுற்றுலா திட்டம் குறித்து கேட்ட போது, 'அவர் இணையதளம் அல்லது வாட்ஸாப் வாயிலாக, சுற்றுலா திட்டம் மற்றும் முன்பதிவு குறித்த தகவல்களை பெற்றுக் கொள்ளுங்கள்' என்றார்.

இணையதளம் வழியே தகவல் பெற சென்னையில் ஏன் அலுவலகம் அமைக்க வேண்டும்?

கேரளா, ஒடிஷா, டில்லி உள்ளிட்ட மாநிலங்களின் அலுவலகமும் பெரும்பாலான நேரங்களில் மூடியே உள்ளன. இவை குறித்து, அருகில் இருந்த சுற்றுலா துறை அதிகாரியிடம் கேட்ட போது, 'கதவுகளில் எழுதப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்' என்றார்.

வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல விரும்புவோர் பயனடையவே, இது போன்ற தகவல் மையங்களை, பிற மாநில அரசுகள் அமைத்துள்ளன. ஆனால், இம்மையங்கள் பெயரளவில் மட்டும் செயல்படுவது வேதனையாக உள்ளது.

தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகளாவது, பிற மாநில சுற்றுலா தகவல் மையங்கள் சிறப்பாக செயல்பட, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us