sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மிகுந்த மகிழ்ச்சியோடு உருவானது எங்கள் கூட்டணி: இ.பி.எஸ்.,

/

மிகுந்த மகிழ்ச்சியோடு உருவானது எங்கள் கூட்டணி: இ.பி.எஸ்.,

மிகுந்த மகிழ்ச்சியோடு உருவானது எங்கள் கூட்டணி: இ.பி.எஸ்.,

மிகுந்த மகிழ்ச்சியோடு உருவானது எங்கள் கூட்டணி: இ.பி.எஸ்.,

24


UPDATED : மே 03, 2025 09:09 PM

ADDED : மே 03, 2025 08:56 PM

Google News

UPDATED : மே 03, 2025 09:09 PM ADDED : மே 03, 2025 08:56 PM

24


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மிகுந்த மகிழ்ச்சியோடு உருவானது தான் அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணி, எங்களுக்கு எந்த மிரட்டலும் இல்லை என்று அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் இ.பி.எஸ் கூறியுள்ளார்.

சென்னையில், தி.மு.க., அரசைக் கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., தலைமை தாங்கினார். அ.தி.மு.க., முக்கிய முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

அ.தி.மு.க., கூட்டத்தில் இ.பி.எஸ்., பேசியதாவது:

அ.தி.மு.க.,வை பா.ஜ., மிரட்டி பணிய வைத்து இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். எங்களுக்கு எந்த மிரட்டலும் இல்லை, மிகுந்த மகிழ்ச்சியோடு உருவானது தான் அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணி.

2026 -சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.,விற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி, வலிமையானது மட்டுமல்ல.நாங்கள் வெற்றிக் கூட்டணி, வெற்றி பெறுவதற்காக கூட்டணி வைத்துள்ளோம்.

இன்னும் இந்த கூட்டணிக்கு பல கட்சிகள் வர உள்ளன.

அ.தி.மு., தலைமையில் தான் கூட்டணி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

இவ்வாறு இ.பி.எஸ். பேசினார்.






      Dinamalar
      Follow us