sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சொந்தமாக டீசல் பங்க்; மொத்தமாக கொள்முதல் செலவை குறைத்து லாபம் பார்க்கும் தனியார் பஸ்கள் அரசும் பின்பற்றினால் தினமும் ரூ.2 கோடி மிச்சமாகும்

/

சொந்தமாக டீசல் பங்க்; மொத்தமாக கொள்முதல் செலவை குறைத்து லாபம் பார்க்கும் தனியார் பஸ்கள் அரசும் பின்பற்றினால் தினமும் ரூ.2 கோடி மிச்சமாகும்

சொந்தமாக டீசல் பங்க்; மொத்தமாக கொள்முதல் செலவை குறைத்து லாபம் பார்க்கும் தனியார் பஸ்கள் அரசும் பின்பற்றினால் தினமும் ரூ.2 கோடி மிச்சமாகும்

சொந்தமாக டீசல் பங்க்; மொத்தமாக கொள்முதல் செலவை குறைத்து லாபம் பார்க்கும் தனியார் பஸ்கள் அரசும் பின்பற்றினால் தினமும் ரூ.2 கோடி மிச்சமாகும்


ADDED : அக் 31, 2025 02:23 AM

Google News

ADDED : அக் 31, 2025 02:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அரசு போக்குவரத்து கழகங்களை விட, தனியார் பஸ் நிறுவனங்கள் டீசல் செலவை கணிசமாக குறைத்துள்ளன. இந்த நடைமுறையை தமிழக அரசும் பின்பற்றினால், அரசு போக்குவரத்து கழகங்கள் தினமும் 2 கோடி ரூபாய் சேமிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் வாயிலாக, தினமும் 20,508 பஸ்கள் இயக்கப்படுகின்றன. டீசல் விலை, சுங்கச்சாவடி கட்டணம் உள்ளிட்டவற்றால், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு செலவு அதிகரித்து வருகிறது.

டீசல் மானியம் அரசு போக்குவரத்து கழகங்களின் தினசரி வருவாய் 39.3 கோடி; செலவு 57.68 கோடி; நிதிப்பற்றாக்குறை, 18.65 கோடி ரூபாய்.

தமிழகம் முழுதும் உள்ள 4,700 தனியார் பஸ்களும், தற்போதுள்ள கட்டணத்தில் தான் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்து கழகங்களுக்கு டீசல் மானியம், மகளிர் இலவச பயணத்திற்கான கட்டணம் போன்றவற்றை, தமிழக அரசு வழங்குகிறது.

ஆனால், இதுபோன்ற சலுகைகள், தனியார் பஸ்களுக்கு கிடைப்பதில்லை. இருப்பினும், டீசல் செலவை குறைப்பதில் தனியார் பஸ் உரிமையாளர்கள் தனி கவனம் செலுத்தி வருகின்றனர்.

தனியார் பஸ் நிறுவனங்களும், லாரி போக்குவரத்து நிறுவனங்களும் தங்கள் சொந்த செலவில், 'கேப்டிவ் பங்க்' எனப்படும், பெட்ரோல், டீசல் பங்க் அமைக்க மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் அனுமதி தருகின்றன.

அதாவது, லாரி, பஸ் உரிமையாளர்கள், பெருநிறுவன பஸ் மற்றும் லாரி நிறுவன சங்கங்கள் மற்றும் ஆம்னி பஸ் சங்கங்கள் போன்றவை, சொந்த செலவில் 'கேப்டிவ் பங்க்'குகள் அமைக்க முறையாக அனுமதி பெறுகின்றன. இதற்கான செலவு, 18 லட்சம் முதல், 22 லட்சம் ரூபாய் வரை ஆகிறது.

விலை குறைவு இவ்வாறு அமைக்கப்பட்ட பங்க்குகளுக்கு, நயாரா, எம்.ஆர்.எல்., போன்ற தனியார் நிறுவனங்களிடம் இருந்து, டீசல் மொத்தமாக கொள்முதல் செய்யப்படுகிறது. அதனால், சந்தை விலையை விட, லிட்டருக்கு 10 ரூபாய் வரை குறைவாக கிடைக்கிறது.

தனியார் பஸ், ஆம்னி, லாரி உரிமையாளர்கள், சொந்தமாக பங்க் அமைத்து பயனடைகின்றனர். இதுபோன்ற எரிபொருள் செலவு சிக்கன நடவடிக்கையை, அரசு போக்குவரத்து கழகங்கள் முன்னெடுக்காதது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற அதிகாரிகள் கூறியதாவது:

தமிழக அரசு நிர்ணயம் செய்த பஸ் கட்டணத்தில், எந்தவித அரசு சலுகையும் இல்லாமல் தனியார் பஸ்களின் உரிமையாளர்கள் செயல்படுகின்றனர். இதில், டீசல் செலவை குறைக்க சிக்கன நடவடிகையை கையாளுகின்றனர்.

மாவட்ட கலெக்டரிடம் உரிய அனுமதி பெற்று, அவர்களின் சொந்த செலவில் பங்க் அமைக்கின்றனர். இதனால், குறைந்த விலையில் டீசல் வாங்குகின்றனர்.

அரசு போக்குவரத்து கழகங்களும் இதுபோல் செய்தால், டீசல் செலவில் மட்டும் தினமும், 2 கோடி ரூபாய் சேமிக்க முடியும். அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதால், மேலும் விலையை குறைத்து வாங்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தரத்தில் மாற்றம் இல்லை!
அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் கூறியதாவது: நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வைத்திருக்கும் நிறுவனங்கள், உரிய அனுமதி பெற்று சொந்த செலவில், 'கேப்டிவ் பங்க்' அமைத்து கொள்கின்றன. தமிழகத்தில் லாரி, தனியார் பஸ் உரிமையாளர்கள், இதுபோன்ற பங்க்குகளை அதிகளவில் அமைத்து வருகின்றனர். இதனால், டீசல் செலவை குறைக்க முடிகிறது. லிட்டருக்கு, 5 முதல் 10 ரூபாய் வரை குறைத்து வாங்க முடிகிறது. டீசல் தரத்தில் எந்த மாறுபாடும் இருப்பதில்லை. இதனால், பஸ், லாரி களுக்கு எந்த பாதிப்பு இல்லாமல் இயக்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us