sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெரியார் பஸ் நிலைய கடைகளுக்கு பேக்கேஜ் டெண்டர்: அமைச்சர்

/

பெரியார் பஸ் நிலைய கடைகளுக்கு பேக்கேஜ் டெண்டர்: அமைச்சர்

பெரியார் பஸ் நிலைய கடைகளுக்கு பேக்கேஜ் டெண்டர்: அமைச்சர்

பெரியார் பஸ் நிலைய கடைகளுக்கு பேக்கேஜ் டெண்டர்: அமைச்சர்


ADDED : மார் 26, 2025 02:24 AM

Google News

ADDED : மார் 26, 2025 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''மதுரை பெரியார் பஸ் நிலைய வணிக வளாகம் கட்டப்பட்ட பகுதிக்கு, 3 அடி நீள பாதை தான் உள்ளது. இதனால், கடைகளை வாடகைக்கு எடுக்க யாரும் முன்வரவில்லை. தற்போது 'பேக்கேஜ்' முறையில், டெண்டர் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தியாகராஜன் தெரிவித்தார்.

சட்டசபையில் விவாதம்:

அ.தி.மு.க., - ராஜன் செல்லப்பா: 'ஊராட்சிகளை இணைத்து, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. அவ்வாறு இணைக்கப்படும் பகுதிகளில், ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு நிதி வழங்காது. எனவே, அதற்கான செலவை மாநில அரசே ஏற்க வேண்டும்.

துாய்மை பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்வதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

அமைச்சர் நேரு: தமிழகத்தில், 40,000க்கு மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் உள்ளனர்.அவர்களை பணி நிரந்தரம் செய்வதாக, வாக்குறுதி அளிக்கவில்லை. அவர்களுக்கு பணி பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என, வாக்குறுதி அளித்து உள்ளோம்.

ராஜன் செல்லப்பா: மதுரை பஸ் நிலையத்தில் கட்டப்பட்ட வணிக வளாகம், எப்போது பயன்பாட்டுக்கு வரும்.

அமைச்சர் தியாகராஜன்: 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், எந்தெந்த பணிகள் செய்யக்கூடாதோ, அவை செய்யப்பட்டுள்ளன. வணிக வளாகம் கட்டப்பட்ட பகுதிக்கு, 3 அடி நீள பாதை தான் உள்ளது. இதனால், கடைகளை வாடகைக்கு எடுக்க யாரும் முன்வரவில்லை. தற்போது 'பேக்கேஜ்' முறையில், டெண்டர் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராஜன் செல்லப்பா: சொத்துவரி முதல் குப்பை வரி வரை உயர்த்தப்பட்டுள்ளது. வரி செலுத்தாதவர்களின் வீடுகளுக்கு, கடப்பாரை எடுத்துச் செல்கின்றனர். வீட்டின் முன் குப்பையை கொட்டுகின்றனர்.

அமைச்சர் நேரு: மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் வரி விதிப்பு குறைவாகவே உள்ளது. காரைக்குடியில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார். அவ்வாறு நடந்து கொண்ட இருவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

அரசுக்கு நிதி தட்டுப்பாடு: தியாகராஜன் வெளிப்படை


அ.தி.மு.க., - கே.பி.முனுசாமி: தற்போதைய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர், நிதி அமைச்சராக இருந்த போது, ஓசூர் மாநகரில், 'ஹைடெக் சிட்டி' அமைக்கப்படும் என்று அறிவித்தார்; ஆனால், செயல்படுத்தவில்லை.
அமைச்சர் தியாகராஜன்: ஏற்கனவே அறிவித்த திட்டம் என்னவானது என்று கேட்கிறீர்கள். காலம் மாற, மாற, சில சூழ்நிலைகளும் மாறும். நீர்வளத்துறை அமைச்சர் என்னிடம், நிதி பெறுவது எவ்வளவு கஷ்டம் என, இப்போது தெரிகிறதா என்று ஒரு முறை கேட்டார். நீர்வளத்துறைக்கு அப்போது, 10,000 கோடி ரூபாய் அளவிற்கு, மானிய கோரிக்கையை அவர் தாக்கல் செய்தார். இன்றைக்கும் அதே அளவிற்கு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
தகவல் தொழில்நுட்ப துறைக்கு அன்று, 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இன்றைக்கு, 130 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது.நிதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. துறையின் நிதி, 300 கோடி ரூபாய்க்கு மேல், அரசிற்கு திரும்ப பெறப்பட்டுள்ளது. இது ஏற்கனவே அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடையாக உள்ளது.








      Dinamalar
      Follow us