ADDED : மே 01, 2025 05:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை சுமூகமான சூழலில் கொண்டுசெல்ல வேண்டும் என டில்லியில் தலைவர்களை சந்தித்தபோது கூறினர்.
தி.மு.க., அமைச்சர்கள் மீது நீதிமன்றங்கள், சரியான அளவில் நடவடிக்கை எடுத்து வருகிறது. நீதிமன்ற உத்தரவை அடுத்தே, பிரச்னைக்குரிய 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்துகொண்டு, இன்னொரு நாட்டுக்கு ஆதரவாகப் பேசுவது தேசத்துரோக செயல். இதை பல அரசியல்வாதிகள் துணிந்து செய்கின்றனர். ஆனால், பாகிஸ்தானில் இருக்கும் அந்நாட்டவரே, 'எங்களுக்கு இந்த நாடு வேண்டாம்; மோடிதான் வேண்டும்' என சொல்வதை ஊடகங்களில் பார்க்கிறோம்.
-- நயினார் நாகேந்திரன்,
தலைவர், தமிழக பா.ஜ.,

