sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 பழனிசாமிக்கு வாய்ப்பு மறுப்பு; அ.தி.மு.க., வெளிநடப்பு

/

 பழனிசாமிக்கு வாய்ப்பு மறுப்பு; அ.தி.மு.க., வெளிநடப்பு

 பழனிசாமிக்கு வாய்ப்பு மறுப்பு; அ.தி.மு.க., வெளிநடப்பு

 பழனிசாமிக்கு வாய்ப்பு மறுப்பு; அ.தி.மு.க., வெளிநடப்பு


ADDED : ஜன 23, 2026 06:57 AM

Google News

ADDED : ஜன 23, 2026 06:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் பிரச்னைகள் குறித்து பேச வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வலியுறுத்தினார். அவருக்கு வாய்ப்பு வழங்காததால் அ.தி.மு.க.,வினர் கோஷம் எழுப்பினர்.

அப்போது நடந்த விவாதம்:

சபாநாயகர் அப்பாவு: கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எழுப்பும் கேள்விகளுக்கு, அமைச்சர் உரிய பதில் அளித்ததால்தான் நன்றாக இருக்கும். எனவே, பதில் தயார் செய்த பின், இந்த பிரச்னை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.

முதல்வர் ஸ்டாலின்: சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், அரசு அதிகாரிகளுடன் ஆலோசித்து பதில் பெற்று சொல்வதுதான் சரியாக இருக்கும். எனவே, நாளை இந்த பிரச்னை எடுத்துக் கொள்ளப்படும்.

அதன் பின்னும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து கோஷமிட்டபடி நின்றனர்.

அமைச்சர் வேலு: கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து பேச, ஒரு மணி நேரத்திற்கு முன்னால் கடிதம் கொடுக்கப்படும். அமைச்சர் பதில் தயார் செய்தபின், விவாதத்திற்கு அது எடுத்துக் கொள்ளப்படும்.

ஆனால், அ.தி.மு.க., ஆட்சியில் சபாநாயகராக இருந்த தனபால், ஒரு நாளைக்கு முன்னால் கடிதம் கொடுக்க வேண்டும் என மாற்றி விட்டார். கவர்னர் உரை மீது விவாதம் நடக்கும்போது, கவன ஈர்ப்பு, ஒத்திவைப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாது என்றும் உத்தரவு போட்டு உள்ளார்.

இப்போது, 'இந்த விவாதத்தை நாளைக்கு எடுத்துக்கொள்ளலாம்; அதற்கு நான் பொறுப்பேற்கிறேன்' என முதல்வர் கூறிய பிறகும் கேட்பது முறையல்ல. துறை சார்ந்த செயலரிடம் குறிப்பு வாங்கி பேசினால்தான் உண்மை தெரியும்.

முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சர்களுக்கு விதிகள் எல்லாம் தெரிந்தும், நேரத்தையும் காலத்தையும் திட்ட மிட்டு வீணடித்து குழப்பத்தை உருவாக்க நினைக்கின்றனர்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

கடைசி வரை வாய்ப்பு வழங்காததால், பழனிசாமி தலைமையில் அவரது கட்சி எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.






      Dinamalar
      Follow us