ADDED : மார் 15, 2026 05:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
யாருக்கு அதிகாரம் என்பதே பழனிசாமிக்கு தெரியவில்லை தி.மு.க., தலைமையில் உருவான கூட்டணி, தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின், கூட்டணியி ல் உள்ள அனைவரின் மனம் புண்படாத வகையில், அரவணைத்து கூட்டணியை வழிநடத்திச் செல்கிறார். காஸ் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு போன்ற விவகாரங்களில், மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கூடத் தெரியாமல் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசி வருகிறார். 4 ஆண்டுகள் முதல்வராக இருந்த பழனிசாமிக்கு, எந்த பிரச்னைக்கு, எந்த அதிகார வரம்பில், யார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூடத் தெரியவில்லை. மத்திய அரசு செய்ய வேண்டியதை, முதல்வர் செய்ய வேண்டும் என கூறுகிறார். எக்காரணம் கொண்டும் தமிழகத்தில் பா.ஜ.,வை காலுான்ற விடக்கூடாது.
- நேரு, தமிழக அமைச்சர், தி.மு.க.,

