ADDED : அக் 15, 2025 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:உடல்நலம் பாதிக்கப்பட்டு தேறி வரும் அமைச்சர் துரைமுருகனிடம், எதிர்க்கட்சி தலைவரான, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நலம் விசாரித்தார்.
சட்டசபை கூட்டம் நேற்று துவங்கியது. இதில், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.
தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த துரைமுருகன், சபை நடவடிக்கைகளில் நேற்று பங்கேற்றார்.
சபை நிகழ்ச்சி முடிந்ததும், அவரது அருகில் சென்ற பழனிசாமி, உடல்நலம் விசாரித்தார்.
பின், தன் அறைக்கு சென்ற பழனிசாமி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை சந்தித்து உற்சாகமாக பேசிக்கொண்டு இருந்தார்.
ஒரு மணி நேரத்திற்கு பின், அங்கிருந்து புறப்பட்டு வீட்டுக்கு சென்றார்.