ADDED : நவ 18, 2025 06:42 AM

ஸ்ரீவில்லிபுத்துாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:
மத்தியில் தெய்வீகமான, பலமான பாரதத்தை உருவாக்கும் ஆட்சி, பிரதமர் மோடி தலைமையில் அற்புதமாக நடக்கிறது. சாமானியனாக பிறந்த மோடி, அமெரிக்காவே பயப்படும் அளவிற்கு வலிமையான பாரதத்தை உருவாக்கி உள்ளார். தமிழகத்தின் தங்க மகனாக பழனிசாமி ஜொலிக்கிறார். தெய்வீக பக்தி, தேச பக்தி கொண்ட அவரது ஆட்சியில், தமிழகம் பொற்காலமாக இருந்தது.
ஆனால், தி.மு.க., ஆட்சியில் சொத்து வரி, தொழில் வரி என பல வரிகள், பல மடங்கு உயர்ந்து விட்டன. விலைவாசியும் அதிகரித்ததால், அனைத்து தரப்பு மக்களும் அவதிப்படுகின்றனர். தி.மு.க., ஆட்சி மீது, மக்களிடம் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால், தி.மு.க., அமைச்சர்கள் மத்தியில் கலக்கம் வந்துவிட்டது. தி.மு.க.,வினர் மத்தியில் சோர்வு வந்துவிட்டது.
தமிழகத்தில் சிங்கம் - புலி கூட்டணியாக, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி இருக்கிறது. சிங்கமாக அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி இருக்கிறார். பழனிசாமி வீட்டை நோக்கி, எத்தனை அரசியல் கட்சி தலைவர்கள் வரப்போகின்றனர் என்பதை ஜனவரி மாதம் பாருங்கள். வரும் 2026 மே மாதம், முதல்வராக பழனிசாமி பதவி ஏற்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.

