sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 முடிவை பழனிசாமி எடுப்பார்: மழுப்பி நழுவிய ஜெயகுமார்

/

 முடிவை பழனிசாமி எடுப்பார்: மழுப்பி நழுவிய ஜெயகுமார்

 முடிவை பழனிசாமி எடுப்பார்: மழுப்பி நழுவிய ஜெயகுமார்

 முடிவை பழனிசாமி எடுப்பார்: மழுப்பி நழுவிய ஜெயகுமார்


ADDED : டிச 25, 2025 08:40 AM

Google News

ADDED : டிச 25, 2025 08:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''பன்னீர்செல்வம், தினகரன் நிலைப்பாடு குறித்து, பழனிசாமி முடிவு செய்வார்,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் புகழை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. அதேபோலத்தான், அ.தி.மு.க.,வும் அழிக்க முடியாத இயக்கம்.

பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர், அவர்களின் நிலைப்பாட்டை எடுக்கின்றனர். அதை ஏற்றுக் கொள்வதா, இல்லையா என்பதை, பழனிசாமி முடிவு செய்வார். நான் கருத்து கூற முடியாது. பன்னீர்செல்வம் கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க., பூமாலை கிடையாது. கட்டி முடிக்கப்பட்ட கோபுரம். உதிர்ந்த செங்கல்கள் குறித்து பேச விரும்பவில்லை.

நுாறு நாள் வேலை திட்டத்தில், காந்தி பெயரை மாற்றக் கூடாது என்பது எங்கள் நிலைப்பாடு. அதிலுள்ள கெடுபிடிகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இத்திட்டத்தை முழுமையாக சிதைக்காமல், உள்ளபடி இருந்தால், அனைவரும் மகிழ்ச்சி அடைவர். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை, முன்பு கடுமையாக விமர்சித்தீர்கள். தற்போது அவர் குறித்து கேட்டால் அமைதியாகி விடுகிறீர்களே என்ற கேள்விக்கு, ''தேவைப்பட்டால் கடுமையாக விமர்சிப்பேன்; தேவைப்படாதபோது, விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை,'' எனக் கூறி நழுவினார்.






      Dinamalar
      Follow us