ADDED : மார் 10, 2024 12:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வழிபட்டார்.
சிவராத்திரியையொட்டி, அனைத்து சிவன் கோவில்களிலும் நேற்று முன்தினம் இரவு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. நேற்று காலை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்றார்;அங்கு மனமுருக இறைவனை வழிபட்டார்.
அதன்பின், கோவிலுக்கு சொந்தமான கோசாலைக்கு சென்று, பசுக்களுக்கு அகத்தி கீரை வழங்கினார். லோக்சபா தேர்தலில் பலமான கூட்டணி அமைந்து, தேர்தலில் வெற்றி பெற, அவர் இறைவனை வேண்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.

