தலா ரூ.1 லட்சம் நிதியுதவி பன்னீர்செல்வம் அறிவிப்பு
தலா ரூ.1 லட்சம் நிதியுதவி பன்னீர்செல்வம் அறிவிப்பு
ADDED : டிச 04, 2024 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:திருவண்ணாமலையில் நிலச்சரிவில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
திருவண்ணாமலையில், நிலச்சரிவு ஏற்பட்டு, ஏழு பேர் இறந்தது குறித்து, மிகுந்த மன வேதனை அடைந்தேன். இறந்தவர்கள் குடும்பத்திற்கு, அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில், தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். கனமழையால் பாதிக்கப்பட்ட, அப்பகுதி மக்களுக்கு, நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும்.