ADDED : டிச 01, 2024 02:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னையில் உள்ள பல மால்களில், 200 முதல் 500 இருசக்கர வாகனங்கள், 150 முதல் 400 கார்கள் நிறுத்தும் வகையில் கீழ் தளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இங்கு வெள்ளம் புகாத வகையில் கட்டமைத்துள்ளனர். வழக்கமான நாட்களில், 4 மணி நேரத்திற்கு, 100 - 200 ரூபாய் வசூலிக்கின்றனர். வெள்ள பாதிப்பில் இருந்து தப்பிக்க பலர், கார்களை மால்களில் நிறுத்துகின்றனர். காருக்கு ஒரு நாள், 500 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். ஓ.எம்.ஆர்., வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள மால்களில் ஏராளமானோர் கார்களை நிறுத்தியுள்ளனர்.

