sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருச்சி ஏர்போர்ட்டில் பயணியர் அலைக்கழிப்பு

/

திருச்சி ஏர்போர்ட்டில் பயணியர் அலைக்கழிப்பு

திருச்சி ஏர்போர்ட்டில் பயணியர் அலைக்கழிப்பு

திருச்சி ஏர்போர்ட்டில் பயணியர் அலைக்கழிப்பு


ADDED : டிச 21, 2024 12:15 AM

Google News

ADDED : டிச 21, 2024 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:திருச்சி விமான நிலையத்தில், 'ஏரோபிரிட்ஜ்' ஒதுக்கீடு செய்யாமல் பயணியரை அழைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.

திருச்சியில் இருந்து மும்பை செல்லும், 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' பயணியர் விமானம் நேற்று முன்தினம் புறப்பட தயாராக இருந்தது. பயணியர் பாதுகாப்பு சோதனைகளை முடித்து ஒதுக்கப்பட்ட, 'கேட்' பகுதியில் விமானத்திற்கு காத்திருந்தனர்.

பொதுவாக பெரிய ரக விமானங்களை இயக்கும் போது, 'ஏரோபிரிட்ஜ்' என்ற விமானத்தை இணைக்கும் பாலம் பயன்படுத்தப்படும், பயணியர் அதில் எளிமையாக ஏறி உள்ளே செல்லலாம்.

அதற்கு பதிலாக, 'ரீமோட் பே' எனப்படும், பஸ்சில் அழைத்து சென்று விமானத்தில் ஏற்றப்பட்டுள்ளதாக பயணியர் புகார் தெரிவித்துள்ளனர்.

'ஏரோபிரிட்ஜ்' செயல்பாட்டில் இருந்தும் பயன்படுத்தாதது, பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற நிலை தொடர்வதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, திருச்சி விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், 'இண்டிகோ நிறுவனம் கேட்டதால் தான், ரீமோட் பே வசதி தரப்பட்டது, அவர்கள் கேட்டிருந்தால், ஏரோபிரிட்ஜ் வழங்கப்பட்டிருக்கும்' என்றனர்.






      Dinamalar
      Follow us