sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஓய்வூதியதாரர் பண்டிகை முன்பணம் உயர்வு

/

ஓய்வூதியதாரர் பண்டிகை முன்பணம் உயர்வு

ஓய்வூதியதாரர் பண்டிகை முன்பணம் உயர்வு

ஓய்வூதியதாரர் பண்டிகை முன்பணம் உயர்வு


ADDED : ஜூன் 05, 2025 12:40 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணத்தை, 4,000 ரூபாயில் இருந்து, 6,000 ரூபாயாக உயர்த்தி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

'அரசு ஓய்வூதியதாரர்கள், தங்கள் குடும்பத்தினருடன் பண்டிகைகளை கொண்டாட, வழங்கப்படும் முன்பணம், 4,000 ரூபாயில் இருந்து 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

'இந்த உயர்வால், 52,000 ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். அரசுக்கு 10 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.

'பொங்கல் பண்டிகை கொண்டாட, முன்னாள் கிராம பணியமைப்பு உட்பட, சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு, ஆண்டுதோறும் வழங்கப்படும் 500 ரூபாய், 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின், சட்டசபையில் ஏப்ரல், 28ம் தேதி அறிவித்தார்.

இவற்றை செயல்படுத்த, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பண்டிகைகால முன்பணத்தை, 10 மாத தவணையில் பிடித்தம் செய்ய, முடிவு செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us