sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது: முருகன்

/

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது: முருகன்

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது: முருகன்

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது: முருகன்


ADDED : அக் 19, 2024 07:29 PM

Google News

ADDED : அக் 19, 2024 07:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' என, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

சென்னை விமான நிலையத்தி,அவர் அளித்த பேட்டி:

தமிழக கவர்னர் ரவியை திரும்ப பெற வேண்டும் என, பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியது, மக்களை திசை திருப்பும் செயல். ஹிந்தி மாதம் என்பது மத்திய அரசின் அனைத்து துறைகளிலும், ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிப்பது வாடிக்கை.

தி.மு.க., - காங்., கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும், ஹிந்தி வாரம் கடைபிடிக்கப்பட்டது. மத்திய அமைச்சர்களாக, தி.மு.க.,வினர் இருந்த துறைகளிலும் அதை முழுமையாக கடைபிடித்தனர்.

தமிழ் மொழியை பாதுகாப்பதிலும், உலகளவில் எடுத்து செல்வதிலும் முதன்மையாக இருப்பவர் பிரதமர் மோடி. தேர்தல் வாக்குறுதியில் கூறியதை போல திருவள்ளுவருக்கு கலாசார மையம் ஏற்படுத்தி இருக்கிறோம். இப்படித்தான் தமிழ் மொழியை உலக அளவில் போற்றுதலுக்குரிய மொழியாக ஆக்கி இருக்கிறோம்.

சென்னை துார்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடந்த ஹிந்தி மாத நிறைவு நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது, திராவிட நல் திருநாடு என்ற வாக்கியம் விடுபட்டுள்ளது. அந்தத் தவறு யார் செய்தது என்பது எல்லாருக்கும் தெரியும். அந்த தவறுக்கு, சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பும் கேட்டுவிட்டனர். அப்படி இருக்கும்போது, அந்த செயலுக்கு கவர்னரை தொடர்புபடுத்துவது நியாயமான விஷயம் இல்லை. குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியில், கவர்னர் சிறப்பு விருந்தினராகவே கலந்து கொண்டார். அப்படி இருக்கும்போது, அவரை எப்படி நடந்த சிறு தவறுக்கு பொறுப்பாக முடியும்?

தமிழகத்தின் சமீபத்திய மழை வெள்ளத்தை, தி.மு.க., அரசு சரியாக கையாளவில்லை. அதை திசை திருப்பும் நோக்கிலேயே, தூர்தர்ஷனில் நடந்த ஒரு விவகாரத்தை அரசியலாக்குகின்றனர். இது 1967ம் ஆண்டு கிடையாது. தற்போது மக்கள் தெளிவாக உள்ளனர். நாம் யாரும் ஹிந்திக்கு ஆதரவாளர்கள் கிடையாது; அதேசமயம் எதிர்ப்பாளர்களும் கிடையாது.

தி.மு.க., நிர்வாகிகள் நடத்தும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஹிந்தியை பாடமாக வைக்க மாட்டோம் என சொல்லி விட்டு ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிப்பரா? அதற்கு அவர்கள் முன் வர மாட்டார்கள். அவர்களுக்கு, அதில் வருமானம் கிடைக்கிறது. மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனிமேல் நடக்காது; அது எடுபடாது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us