sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சபாநாயகர் தொகுதியில் குடிநீருக்காக காலிகுடங்களுடன் மக்கள் மறியல்

/

சபாநாயகர் தொகுதியில் குடிநீருக்காக காலிகுடங்களுடன் மக்கள் மறியல்

சபாநாயகர் தொகுதியில் குடிநீருக்காக காலிகுடங்களுடன் மக்கள் மறியல்

சபாநாயகர் தொகுதியில் குடிநீருக்காக காலிகுடங்களுடன் மக்கள் மறியல்


ADDED : ஜூன் 11, 2025 02:24 AM

Google News

ADDED : ஜூன் 11, 2025 02:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத்தில் சபாநாயகர் அப்பாவுவின் ராதாபுரம் சட்டசபை தொகுதியில் போதிய குடிநீர் சப்ளையில்லாததால் கிராம மக்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

இத்தொகுதிக்குட்பட்ட ஆனைகுளம் கிராம ஊராட்சியில் போதிய குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் இருந்து ரூ. 605 கோடியில் தொகுதி முழுதும் பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை.

இதனால் ஆனைகுளம் கிராம மக்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பினர்.

ஏற்கனவே வள்ளியூர் அருகே கோட்டையடி கிராம மக்கள் சில நாட்களுக்கு முன் சபாநாயகர் அப்பாவுவை வள்ளியூரில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us