ADDED : அக் 16, 2025 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, தற்காலிகமாக பட்டாசு கடைகள் வைக்க, அக்., 15 வரை, தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு, 7,313 விண்ணப்பங்கள் வந்துள்ளன. நிரந்தரமாக பட்டாசு கடைகள் வைக்க, 2,890; ஒரே இடத்தில், பல பட்டாசு கடை கள் வைக்க, 38 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இவற்றை பரிசீலனை செய்து, கடைகளில் நேரடி ஆய்வு நடத்தி, மாநிலம் முழுதும், 9,018 பட்டாசு கடைகள் வைக்க, தீயணைப்பு துறை அனுமதி வழங்கி உள்ளது.