sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியாக இ.பி.எஸ்.சை விசாரிக்க அனுமதி

/

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியாக இ.பி.எஸ்.சை விசாரிக்க அனுமதி

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியாக இ.பி.எஸ்.சை விசாரிக்க அனுமதி

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியாக இ.பி.எஸ்.சை விசாரிக்க அனுமதி


ADDED : டிச 07, 2024 02:03 AM

Google News

ADDED : டிச 07, 2024 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில், எதிர்தரப்பு சாட்சிகளாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, சசிகலாவை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முகாம் அலுவலகமாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு எஸ்டேட் இருந்தது.

அவ்வப்போது எஸ்டேட்டுக்கு வந்து தங்குவது வழக்கம். ஜெயலலிதா மறைவுக்கு பின், கோடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதுார் கொலை செய்யப்பட்டார்.

எஸ்டேட்டுக்குள் புகுந்து கொள்ளையும் அடிக்கப்பட்டது; 2017 ஏப்ரலில் இந்த சம்பவம் நடந்தது.இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டிரைவர் கனகராஜ், சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.

முதலாவதாக குற்றம் சாட்டப்பட்ட சயானின் மனைவியும், குழந்தையும் விபத்தில் இறந்தனர்; படுகாயத்துடன் சயான் தப்பினார்.நீலகிரி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், முன்னாள் கலெக்டர் சங்கர், முன்னாள் எஸ்.பி., முரளி ரம்பா, அ.தி.மு.க., நிர்வாகி சஜீவன், எஸ்டேட் மேலாளர் நடராஜன் மற்றும் சுனில் ஆகியோரை விசாரிக்கக் கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர், நீலகிரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதி அளித்தது. மற்றவர்களை விசாரிக்க கோரியதை நிராகரித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தீபு உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.

இம்மனு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'முதல்வராக பழனிசாமி இருந்ததால், நீதிமன்ற நடைமுறையை தவறாகப் பயன்படுத்தி, அவருக்கு சம்மன் அனுப்பும்படி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கோர முடியாது என, நீலகிரி நீதிமன்றம் உத்தரவிட்டுஇருந்தது' என்றார்.

போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், 'கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் வழக்கில், மேல் விசாரணை நடந்து வருகிறது' என்றார்.

இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், மனுவின் உத்தரவை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளி வைத்திருந்தார்.

இந்நிலையில், நீலகிரி நீதிமன்றம் நிராகரித்ததை ரத்து செய்து, பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை எதிர்தரப்பு சாட்சிகளாக விசாரிக்க அனுமதி அளித்து, நீதிபதி வேல்முருகன் நேற்று உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us