ADDED : பிப் 13, 2026 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ஜெய்பாலாஜி ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். தமிழக அமைச்சர் தியாகராஜனின் உதவியாளராக ஏற்கனவே இருந்தார்.
இவர் ஒரு கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.77 லட்சம் மதிப்பிலான வீட்டுமனையை மிரட்டி வாங்கி, தொகையை தராமல் ஏமாற்றியதாக மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஜெய்பாலாஜி, அவரது மனைவி கலாவதி மீது வழக்கு பதிந்தனர். இருவரும் கைதாகினர்.
அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் மதுரை நீதித்துறை நடுவர் (ஜெ.எம்.,1) நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இரண்டு நாட்கள் விசாரிக்க அனுமதித்த நீதிபதி ஆனந்த் இன்று (பிப்.13) மாலை 5:00 மணிக்கு ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

