sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க.,வின் போராட்டத்திற்கு அனுமதி; எதிர்க்கட்சி போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பா? எதிர்க்கட்சிகள் கண்டனம்

/

தி.மு.க.,வின் போராட்டத்திற்கு அனுமதி; எதிர்க்கட்சி போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பா? எதிர்க்கட்சிகள் கண்டனம்

தி.மு.க.,வின் போராட்டத்திற்கு அனுமதி; எதிர்க்கட்சி போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பா? எதிர்க்கட்சிகள் கண்டனம்

தி.மு.க.,வின் போராட்டத்திற்கு அனுமதி; எதிர்க்கட்சி போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பா? எதிர்க்கட்சிகள் கண்டனம்

26


ADDED : ஜன 07, 2025 01:43 PM

Google News

ADDED : ஜன 07, 2025 01:43 PM

26


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயக ரீதியாகப் போராடுவதற்கு, அனுமதி இல்லை, ஆனால் தி.மு.க.,வின் வீண் போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பா.ம.க., நிறுவனர் அன்புமணி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை கண்டித்து, பா.ஜ., அ.தி.மு.க., மற்றும் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது தடையை மீறி போராட்டம் நடத்தியதாக கூறி அவர்களை போலீசார் கைது செய்து விடுவித்தனர். இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், சட்டசபையை கவர்னர் ரவி அவமதித்ததாக கூறி, இன்று (ஜன.,07) தமிழகம் முழுவதும் தி.மு.க., வினர் போராட்டம் நடத்தினர். இதற்கு போலீசார் அனுமதி கொடுத்தது எப்படி என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

தமிழக பா.ஜ., தலைவர், அண்ணாமலை

எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயக ரீதியாகப் போராடுவதற்கு, அனுமதி இல்லை, ஆனால் திமுகவின் வீண் போராட்டங்களுக்கு அனுமதி உண்டு. ஜனநாயக ரீதியாக, சுவரொட்டிகள் மூலமாகக் கூட எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க அனுமதி இல்லை, ஆனால், கவர்னரையும், எதிர்க்கட்சிகளையும் வசைபாடும் சுவரொட்டிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு தி.மு.க., பாலியல் குற்றவாளிகளிடம் இருந்து பாதுகாப்பின்மை என, தமிழகம் முழுவதும் திமுகவினர் குற்றங்கள் செய்து கொண்டிருக்க, போலீசார், சுவரொட்டி ஒட்டும் திமுகவினருக்குப் பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறது. தி.மு.க., ஆட்சியில் தமிழகம், அறிவிக்கப்படாத அவசர நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. விரைவில் மக்கள் இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவுரை எழுதுவார்கள்.

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,

போராட்டம் என்பது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை; ஆனால் இங்கு நடக்கும் முதல்வர் ஸ்டாலின் தலைமை யிலான தி.மு.க.,வின் பாசிச ஆட்சியோ, ஜனநாயகத்தின் உரிமைகளை ஒட்டுமொத்தமாக விழுங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகள், பொதுமக்கள் என யாரும் எதற்கும் போராடக் கூடாது என்றும், அதையும் மீறி மக்கள் உணர்வுப்பூர்வமாகப் போராடினால், போலீசாரை கொண்டு அடக்குமுறையைக் கையாள்வது என்றும் அவசர நிலை ஆட்சியையே நடத்தி வருகிறது.

பா.ம.க., தலைவர் அன்புமணி

போராட்டங்களுக்கு அனுமதிப்பதில் பா.ம.க.,வுக்கு ஒரு நீதி, தி.மு.க.,வுக்கு ஒரு நீதியா? போலீசார் தி.மு.க.,வின் ஏவல்துறையாக மாறிவிடக் கூடாது.

தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா

டங்ஸ்டன் சுரங்கம், ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதை எதிர்த்து போராட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று கவர்னரை எதிர்த்து ஒரே நாளில் தமிழகம் முழுவதும் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்த மட்டும் அனுமதி கொடுத்தது யார்?






      Dinamalar
      Follow us