sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வழக்கு ரத்து செய்ய துணைவேந்தர் மனு

/

வழக்கு ரத்து செய்ய துணைவேந்தர் மனு

வழக்கு ரத்து செய்ய துணைவேந்தர் மனு

வழக்கு ரத்து செய்ய துணைவேந்தர் மனு


ADDED : ஜன 17, 2024 03:12 AM

Google News

ADDED : ஜன 17, 2024 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : முறைகேடு புகாரில் சிக்கிய பெரியார் பல்கலை துணை வேந்தர், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சேலம் பெரியார் பல்கலை துணை வேந்தர் ஜெகநாதன்; விதிகளை மீறி சொந்த மாக, தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி அமைப்பை துவங்கி, அரசு நிதியை பயன்படுத்தியதாகவும், பல்கலை அதிகாரிகளை வைத்து அமைப்பை இயங்க செய்ததாகவும், துணை வேந்தருக்கு எதிராக, பல்கலை ஊழியர் சங்கத்தினர் புகார் அளித்தனர்.

ஜாதி பெயரை குறிப்பிட்டு திட்டியதாக, கிருஷ்ணவேணி, சக்திவேல் ஆகியோரும் புகார் அளித்தனர்.

புகாரின்படி, கருப்பூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெகநாதனுக்கு, ஏழு நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.

இதை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் சேலம் போலீஸ் கூடுதல் கமிஷனர் தரப்பில் தாக்கல் செய்த மனு, நாளை மறுதினம் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி, ஜெகநாதன் மனு தாக்கல் செய்துள்ளார்.

மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன், நாளை விசாரணைக்கு வருகிறது.






      Dinamalar
      Follow us