sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சட்டவிரோத மின் வேலியால் பலி இழப்பீடு கோரிய மனு நிராகரிப்பு

/

சட்டவிரோத மின் வேலியால் பலி இழப்பீடு கோரிய மனு நிராகரிப்பு

சட்டவிரோத மின் வேலியால் பலி இழப்பீடு கோரிய மனு நிராகரிப்பு

சட்டவிரோத மின் வேலியால் பலி இழப்பீடு கோரிய மனு நிராகரிப்பு


ADDED : நவ 18, 2024 04:01 AM

Google News

ADDED : நவ 18, 2024 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சட்டவிரோத மின் வேலியால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு, 20 லட்சம் ரூபாய் இழப்பீடு தரும்படி, மின் வாரியத்துக்கு உத்தரவிட கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

விழுப்புரம் மாவட்டம் ஜக்கம்பேட்டையைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது தந்தை சின்னதம்பி. மேய்ச்சலுக்காக மாடு ஓட்டிச் சென்றார். சீதாபதி ரெட்டியார் என்பவரது நிலத்தில், மின் வேலி அமைக்கப் பட்டு இருந்தது.

நிலம் அருகில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சின்னதம்பி, மின் வேலியை தொட்ட போது மின்சாரம் தாக்கி இறந்தார்; 2019 ஏப்ரலில் சம்பவம் நடந்தது.

பரிசீலிக்கவில்லை


இதையடுத்து, மின் வாரியத்திடம், 20 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு, உயர் நீதிமன்றத்தில் ரமேஷ் வழக்கு தொடர்ந்தார்.

மனுவில், 'சட்ட விரோத மின் வேலிக்கு எதிராக, மின் வாரிய அதிகாரி கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

'அதனால் தான், என் தந்தை இறந்தார். உரிய இழப்பீடு கேட்டும், அதை வாரியம் பரிசீலிக்கவில்லை. எனவே, இழப்பீடு வழங்கும்படி மின் வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதி எஸ்.சவுந்தர் முன் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்திருந்தால், சட்ட விரோதமாக மின்சாரம் எடுக்கப்படுவதை தடுத்திருக்கலாம்; இந்த சம்பவமும் நடந்திருக்காது. மின் வாரிய அதிகாரிகளின் கவனக்குறைவால் தான் மரணம் நிகழ்ந்து உள்ளது' என்றார்.

மின்வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.வெங்கட சேஷையா, “அதிகாரிகளுக்கு தெரியாமல், சட்டவிரோதமாக மின்சாரம் எடுக்கும் நடவடிக்கையில், தனி நபர்கள் ஈடுபடுகின்றனர். எங்கேயோ ஒரு மூலையில், விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக மின்சாரம் எடுப்பதை ஆய்வு செய்ய இயலாது.

“தனி நபரின் விவசாய நிலத்தில், இந்தச் சம்பவம் நடந்து உள்ளது. தனி நபரின் சட்டவிரோத செயலுக்கு மின் வாரியம் பொறுப்பாகாது,” என்றார்.

ஏற்க முடியாது


மனுவை விசாரித்த நீதிபதி சவுந்தர் பிறப்பித்த உத்தரவில், 'நடந்த விபத்துக்கு, மின் வாரிய அதிகாரிகள் பொறுப்பேற்க முடியாது.

'எனவே, மனுதாரர் கோரியதை ஏற்க முடியாது; மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தனி நபருக்கு எதிராக மனுதாரர் சிவில் வழக்கு தொடரலாம்' என்று கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us