ADDED : நவ 07, 2025 07:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'வங்கிகளை தேசிய மயமாக்கியது, எதிர்பார்த்த பலன்களை கொடுக்கவில்லை; நோக்கங்கள் முழுமையாக எட்டப்படவில்லை; வங்கிகளை தனியார் மயமாக்குவது தேச நலனை பாதிக்காது' என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
முன்னாள் பிரதமர் இந்திரா, கடந்த 1969-ல், 14 வங்கிகளை, தேசியமயமாக்க எடுத்த முயற்சிகளை, நாட்டு மக்கள் நன்கு அறிவர். கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளே தவிர, தனியார் வங்கிகள் அல்ல.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் முக்கியத்துவத்தை குறைத்து பேசுவது, தனியார் துறைக்கு தாரை வார்க்கும் திட்டமிட்ட முயற்சியாக தெரிகிறது.
- செல்வப்பெருந்தகை தலைவர், தமிழக காங்கிரஸ்

